शनिवार, फ़रवरी 28 2026 | 07:01:24 AM
Breaking News
Home / अन्य समाचार / உலக எய்ட்ஸ் தினம் 2024

உலக எய்ட்ஸ் தினம் 2024

Follow us on:

​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. தற்போதைய சவால்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அரசுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது. ஹெச்.ஐ.வி ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதைப் பற்றிய புரிதலை வளர்ப்பதன் மூலம், உலக எய்ட்ஸ் தினம், அந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை அடைவதற்கும் இடையிலான ஒருங்கிணைந்த தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2024 கருப்பொருள்: “உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!”

 2024 க்கான கருப்பொருள், “உரிமைப் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” என்பதாகும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் அத்தியாவசிய ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் முறையான சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொருவரும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியத்திற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதில் மனித உரிமைகளின் பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. இந்த உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 பிரச்சாரம், உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், களங்கத்தைக் குறைப்பதற்கும், பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸை ஒழிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸின் தற்போதைய நிலை​

ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியிட்ட உலகளாவிய எய்ட்ஸ் புதுப்பிப்பு 2023 இன் படி, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன, அங்கு ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு மற்றும் அதிகரித்த நிதி முதலீடுகள்,  எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதை 2030 க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்தியதற்காக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில், இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது நீடித்த தலையீடுகளின் வெற்றியை நிரூபிக்கிறது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில்

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போர் 1985-ஆம் ஆண்டில் பல்வேறு மக்கள்தொகை குழுக்கள் மற்றும் புவியியல் இடங்களில் தொற்றைக் கண்டறியும் பணி செரோ-கண்காணிப்புடன் தொடங்கியது. ஆரம்ப கட்டம் (1985-1991) ஹெச்.ஐ.வி நோயாளிகளை அடையாளம் காணுதல், ரத்தமாற்றங்களுக்கு முன் ரத்த பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இலக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. 1992-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பு வேகம் பெற்றது. இது நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸைக் கையாள்வதற்கான முறையான மற்றும் விரிவான அணுகுமுறையின் தொடக்கத்தைக் குறித்தது.

முடிவு

உலக எய்ட்ஸ் தினம் 2024 ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை அகற்ற இன்னும் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்டுகிறது. தடுப்பு, சிகிச்சை மற்றும் கவனிப்பு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், முறையான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக களங்கம் போன்ற சவால்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி உலகம் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் முயற்சிகள் கூட்டு நடவடிக்கை, புதுமையான உத்திகள் மற்றும் சுகாதார சமத்துவத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

India Post GDS Recruitment 2026 Notification Banner

बिना परीक्षा सरकारी नौकरी पाने का आखिरी मौका: इंडिया पोस्ट GDS भर्ती 2026 का नोटिफिकेशन आउट, यहाँ देखें पूरी डिटेल्स

नई दिल्ली. भारतीय डाक विभाग India Post ने साल 2026 की अब तक की सबसे …