Monday, December 08 2025 | 01:42:45 AM
Breaking News

இந்திய ஏரோஸ்பேஸ் மருத்துவ சொசைட்டியின் 63-வது ஆண்டு மாநாடு

Connect us on:

இந்தியன் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் இன்ஸ்டிடியூட் (ஐஎஸ்ஏஎம்) 63வது ஆண்டு மாநாடு 2024 டிசம்பர் 05 முதல் 07 வரை பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் (ஐஏஎம்) வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்பி தர்கர் தொடங்கி வைத்தார்.

பாதுகாப்புப் படைகளில் தற்சார்பை அடைவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நிகழ்ச்சியில் பேசிய அவர் வலியுறுத்தினார்.  வான்வெளி மருத்துவத்தில் இளம் கல்வி சாதனையாளர்களை அவர் பாராட்டினார். இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகளின் பல்வேறு கூட்டு சாதனைகளை எடுத்துரைத்து, ஏர் மார்ஷல் ராஜேஷ் வைத்யா தலைமை  உரையை நிகழ்த்தினார்.

முதல் இந்திய விமானப் படைத் தலைவரின் நினைவாக நிறுவப்பட்ட மதிப்புமிக்க ஏர் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி நினைவு உரையை, ஐஐடி மெட்ராஸின் விண்வெளிப் பொறியியல் துறையின் பயிற்சிப் பேராசிரியரும்,  இஸ்ரோ முன்னாள் இயக்குநருமான  டாக்டர் லலிதாம்பிகா வழங்கினார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”