இந்திய வரலாற்றில் கூட்டுறவுத் துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, 2026 ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை நாடு முழுவதும் ஒரு வார கால சிறப்பு விழிப்புணர்வு விழா மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் “கூட்டுறவு மூலம் வளம்” (Sahkar Se Samriddhi) என்ற உன்னத தொலைநோக்குப் பார்வைக்கு வடிவம் கொடுக்கும் …
Read More »இந்தியா அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் 2026: புதுதில்லி உயர்மட்ட சந்திப்பின் முழு பின்னணி!
உலகளாவிய வர்த்தகச் சூழல் மிக வேகமாக மாறிவரும் வேளையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் ஒரு புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளன. அமெரிக்காவின் புதிய வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) தலைமையிலான அதிகாரப்பூர்வ உயர்மட்டக் குழு, 2026 ஜூன் 22 முதல் 24 வரை புதுதில்லிக்கு மிக முக்கியமான ஒரு பயணத்தை மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே சமநிலையான மற்றும் …
Read More »சென்னையின் ஆதம்பாக்கத்தில் சிஹ்சி ஃபார்மசி, ஐந்தாவது கிளை ‘மினி’ வடிவில் தொடக்கம்
சென்னை, 20 மே 2026 ஹெல்த்வாட்ச் டெலிடயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான சிஹ்சி ஃபார்மசி, சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் புதன்கிழமையன்று(மே 20) தனது ஐந்தாவது கிளையை ‘சிஹ்சி ஃபார்மசி மினி’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மை நிதி அதிகாரியுமான சிஏ ஜெயஸ்ரீ காண்டிபன், நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் நல்விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். இது சென்னையில் சிஹ்சி ஃபார்மசியின் அதிவேக …
Read More »அடல் பென்ஷன் திட்டம் 2026: மாதம் ₹5000 ஓய்வூதியம் பெறுவது எப்படி? முழு விவரம்
இந்திய அரசின் மிக முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் பென்ஷன் திட்டம் (APY), 2026-ஆம் ஆண்டிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு முதுமையில் பொருளாதார சுதந்திரத்தை வழங்கி வருகிறது. குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். அடல் பென்ஷன் திட்டம் (APY) என்றால் என்ன? மத்திய அரசால் 2015-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தொழிலாளர்கள் தங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவதை உறுதி …
Read More »PM முத்ரா கடன் திட்டம் 2026: ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன்
மத்திய அரசு சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க முத்ரா கடன் வரம்பை தற்போது ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தியுள்ளது. இது புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். 🔍 முக்கிய விவரங்கள் (Key Details) நோக்கம்: “நிதியுதவி கிடைக்காதவர்களுக்கு நிதி வழங்குதல்” (Funding the Unfunded). வட்டி விகிதம்: 8.85% முதல் 12% வரை (வங்கியின் கொள்கையைப் பொறுத்து மாறும்). பிணையம் …
Read More »ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது
பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று (04.01.2026) புது தில்லியில் அதன் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த அமைப்பு, ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாடு, ஏற்றுமதி நடைமுறைகள், ஒழுங்குமுறை இணக்கத்தை எளிதாக்குதல், முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் வணிகக் கூட்டங்கள், சர்வதேச கண்காட்சிகள், கருத்தரங்குகள், மக்கள் தொடர்புத் திட்டங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்திப் …
Read More »நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது
இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யம். வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் …
Read More »ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது
ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிகள், பொதுப் போக்குவரத்து பகுதிகள் மற்றும் அதிவிரைவு முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது. 2025 நவம்பர் 11 முதல் 13 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், …
Read More »சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது
கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார். குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Read More »தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.
Read More »
Matribhumi Samachar Tamil