சென்னை, 20 மே 2026 ஹெல்த்வாட்ச் டெலிடயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான சிஹ்சி ஃபார்மசி, சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் புதன்கிழமையன்று(மே 20) தனது ஐந்தாவது கிளையை ‘சிஹ்சி ஃபார்மசி மினி’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மை நிதி அதிகாரியுமான சிஏ ஜெயஸ்ரீ காண்டிபன், நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் நல்விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். இது சென்னையில் சிஹ்சி ஃபார்மசியின் அதிவேக …
Read More »சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”
சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)” இன்று சென்னையில் உற்சாகமாக தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி , திறன் மேம்பாடு மற்றும் நிலையான முன்னேற்ற திட்டங்களுக்காக ₹1 முதல் ₹3 கோடி வரை நிதி திரட்டுவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாகும். இந்த சர்வதேச நிதி திரட்டும் முயற்சி, மெட்ராஸ் மிட்டவுன் …
Read More »ரோட்டரி மாவட்டம் 3234 – “Gift of Mobility (கிப்ட் ஆஃப் மோபிலிட்டி)” திட்டத்தின் கீழ் 425 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன
சென்னை, மார்ச் 2, 2026: கல்வி பெறுவதை மேம்படுத்தும் நோக்கில், Rotary International District 3234 சார்பில் “Gift of Mobility (கிப்ட் ஆஃப் மோபிலிட்டி)” திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் மைதானத்தில், பள்ளி செல்லும் 425 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு Meridian Global Ventures Pvt Ltd நிறுவனம் CSR உதவித்தொகை (Grant No. …
Read More »ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது
விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி 04, 2026) பெங்களூருவில் தொடங்கியது. விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், இலகுரக போர் விமானமான தேஜஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ஏடிஏ-வைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை செயலாளரும், …
Read More »செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடர்பான ராஜஸ்தான் அளவிலான மண்டல மாநாடு ஜனவரி 6-ம் தேதி நடைபெறுகிறது – மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்கிறார்
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மண்டல மாநாடு 2026 ஜனவரி 6 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதார வளர்ச்சி, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப …
Read More »தெலங்கானாவில் தனியார் நிறுவனத்தின் நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை திறந்து வைக்கிறார்
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நாளை (ஜனவரி 5, 2026) நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு பண்ணையை திறந்து வைக்கிறார் . ஸ்மார்ட் கிரீன் அக்வாகல்ச்சர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் முதல் வணிக அளவிலான வெப்பமண்டல மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பு அடிப்படையிலான ரெயின்போ டிரவுட் மீன்வளர்ப்பு பண்ணை மற்றும் …
Read More »குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்
குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் 26.12.2025 அன்று விரிவான ஆய்வு நடத்தியது. சாலைகளில் தூசி, கட்டுமானக் கழிவுகள், திறந்தவெளிகளில் குப்பைகள் உள்ளிட்டவற்றை எரித்தல் நிகழ்வுகள் போன்ற சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள படிப்படியான பதில் செயல் திட்டத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 15 குழுக்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2 குழுக்கள் என மொத்தம் 17 ஆய்வுக் குழுக்கள், குருகிராமில் மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட 125 சாலைப் பகுதிகளை ஆய்வு செய்தன. ஆய்வுத் தகவல்கள், புகைப்பட ஆவணங்களுடன் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 125 சாலைப் பிரிவுகளில், 34 பிரிவுகளில் அதிக அளவில் தூசி உள்ளதாகவும், 58 …
Read More »தில்லி மெட்ரோவின் ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லி மெட்ரோவின் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை: 1. ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திரபிரஸ்தா வரை (9.913 கி.மீ.), 2. ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 வரை (2.263 கி.மீ.) 3. துக்ளகாபாத் முதல் …
Read More »ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவியம் கலை படைப்பை அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்குக் கொண்டு செல்கிறது
ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவிய கலை படைப்பை, அதன் பொருட்கள் அனுப்பும் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி, அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றது. பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியம் கலை பாணியில், விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்ட தங்க அடித்தளத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், தனித்துவமான கலை மற்றும் பாரம்பரிய மதிப்பைக் கொண்ட ஒரு விலைமதிப்பற்ற கலாச்சார கலைப் பொருளாகும். இந்தப் புனித கலைப்படைப்பை, பெங்களூருவைச் சேர்ந்த திருமதி ஜெயஸ்ரீ ஃபனீஷ், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி …
Read More »இந்தூரில் நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.12.2025) பங்கேற்றார். இந்த நிகழ்வை அடல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. திருக்குறளில் இருந்து ஒரு குறளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்றாலும், ஒருவரின் செயல்கள் மூலம் தனிச்சிறப்புகள் வெளிப்படுகின்றன என்று கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் சாதாரண மனிதர் அல்ல என்றும், லட்சியம், கொள்கைகள், மதிப்புகளில் உறுதியுடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். அரசியல்வாதி, நிர்வாகி, நாடாளுமன்றவாதி, கவிஞர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த மனிதராக அவர் திகழ்ந்தார் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பொது நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டார் என்றும் அதனால்தான் வாஜ்பாயின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கடைபிடிப்படுகிறது என்றும் அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், அது நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தங்க நாற்கர சாலைத் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார். 1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், திரு வாஜ்பாயின் தலைமை இந்தியாவை ஒரு தன்னம்பிக்கையும் தன்னிறைவும் பெற்ற நாடாக உறுதியாக நிலைநிறுத்தியது என்று கூறினார். 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற …
Read More »
Matribhumi Samachar Tamil