Monday, December 29 2025 | 09:16:47 PM
Breaking News

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள்.  2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன.  தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, …

Read More »

மோடி அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக, அணுசக்தி சீர்திருத்தம் தொடர்பான சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  புதுதில்லியில் இன்று (28.12.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார். இந்தியாவின் அணுசக்தித் துறையில் சாந்தி மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்றும், பாதுகாப்பு, இறையாண்மை, பொது நலன் ஆகியவற்றில் சமரசமற்ற தரங்களைப் பேணும் அதே வேளையில், அமைதியான, தூய்மையான, நிலையான எரிசக்திக்கான திறனும் வலுப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். 60 ஆண்டுகளாக இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கோள்ளப்படவில்லை என்றும், தடைகளை அகற்றி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறனால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார். அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் ஹோமி பாபாவின் காலத்திலிருந்தே, இந்தியாவின் அணுசக்தி திட்டம் வளர்ச்சி, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். சாந்தி மசோதா, அமைதியான நோக்கத்திலிருந்து மாறுபடவில்லை என்றும், தூய மின் உற்பத்தி, மருத்துவ பயன்பாடுகள், மேம்பட்ட ஆராய்ச்சி போன்ற  நோக்கங்களுக்காக அணுசக்தி விரிவாக்கத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு அணுசக்தியும் இன்றியமையாதது என்று அவர் கூறினார். இந்தியா புதைபடிவ எரிபொருள்கள், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும்போது அணுசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அணுசக்தி திறன் 2014-ம் ஆண்டில் சுமார் 4.4 ஜிகா வாட்டாக இருந்தது எனவும் இப்போது இது கிட்டத்தட்ட இருமடங்காக 8.7 ஜிகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.  வரும் ஆண்டுகளில் இதை கணிசமாக அதிகரிக்க தெளிவான திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் சுமார் 100 GW அணுசக்தி திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது …

Read More »

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More »

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.

Read More »

குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்

குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம்  26.12.2025 அன்று விரிவான ஆய்வு நடத்தியது. சாலைகளில் தூசி, கட்டுமானக் கழிவுகள்,  திறந்தவெளிகளில் குப்பைகள் உள்ளிட்டவற்றை எரித்தல் நிகழ்வுகள் போன்ற சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள படிப்படியான பதில் செயல் திட்டத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 15 குழுக்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2 குழுக்கள் என மொத்தம் 17 ஆய்வுக் குழுக்கள், குருகிராமில் மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட 125 சாலைப் பகுதிகளை ஆய்வு செய்தன. ஆய்வுத் தகவல்கள், புகைப்பட ஆவணங்களுடன் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 125 சாலைப் பிரிவுகளில், 34 பிரிவுகளில் அதிக அளவில் தூசி உள்ளதாகவும், 58 …

Read More »

சுங்க அனுமதிக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது

தில்லி சுங்க மண்டலத்தின் தலைமை சுங்க ஆணையரின் தலைமையில், தில்லி சுங்கத்துறையால், ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள கல்பனா சாவ்லா மாநாட்டு அரங்கில் சுங்க அனுமதி வசதிக்குழு  கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  தாவரத் தனிமைப்படுத்தல் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற அரசு முகமைகளும், சுங்க முகவர் சங்கம், அசோசெம் போன்ற வர்த்தக சங்கங்களும் கலந்துகொண்டன. காப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால்  அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய கொள்கை மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.  குறிப்பாக தில்லி சுங்க மண்டலத்திற்குள் அவற்றின் செயலாக்கக் கட்டமைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பங்குதாரர்கள் முக்கிய செயல்பாட்டுச் சிக்கல்களை எழுப்பினர், அவை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டன, இது வசதிகளை வலுப்படுத்தும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைக்குரிய விளைவுகளுக்கு வழிவகுத்தது. கூட்டத்தின் வெளிப்படையான மற்றும் கூட்டு அணுகுமுறை பரவலாகப் பாராட்டப்பட்டது, இது சுங்க செயல்முறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது. மேலும் ஏற்றுமதி-இறக்குமதி சமூகத்தில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தியது. எதிர்காலத்தில், வணிகம் செய்வதை எளிதாக்குவது என்பது சுங்கத்துறை, காப்பாளர்கள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு தொடர்ச்சியான பயணம் என்று தில்லி சுங்க மண்டலம் வலியுறுத்தியது.  முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை, செயல்முறைகளில் அணுகல்தன்மை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தில்லி சுங்கத்துறை நம்பிக்கை, செயல்திறன் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें : https://matribhumisamachar.com/2025/12/10/86283/ आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं: https://www.amazon.in/dp/B0FTMKHGV6 यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : …

Read More »

58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு …

Read More »

இந்தியாவின் அடுத்த தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு ஊக்கம் அளிக்கும் அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தி

7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆர்இபிஎம் எனப்படும் அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த ஆர்இபிஎம் உற்பத்தி திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாகும். உள்நாட்டில் இதன் ஒருங்கிணைந்த உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்னணுவியல் சாதனங்கள், விண்வெளிப் பயன்பாடுகள், பாதுகாப்புத் துறை சாதனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான இந்த வகை காந்தங்களின் உற்பத்தியில் தற்சார்பு அதிகரிக்கும். அரசின் இந்த நடவடிக்கை உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தும். அரிய புவி நிரந்தர காந்தம் (ஆர்இபிஎம்) என்பது வலிமையான காந்த வகைகளில் ஒன்றாகும். அவை சிறிய சாதனங்களில், ஆனால் உயர் செயல்திறன் கொண்ட காந்த சக்திகள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன . அவற்றின் உயர் காந்த வலிமையும் நிலைத்தன்மையும் பெரிய பயன்களை கொடுக்கின்றன. இந்தியாவில் கணிசமான அளவு அரிய புவி தாதுக்கள் உள்ளன. குறிப்பாக பல கடலோர பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் உள்ள மோனசைட் படிவுகளில் சுமார் 13.15 மில்லியன் டன் மோனசைட் உள்ளது. இதில் 7.23 மில்லியன் டன் அரிய புவி ஆக்சைடுகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல், டெரி/சிவப்பு மணல் …

Read More »

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது என்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  திருப்பதியில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி, பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார். …

Read More »

பிரதமரின் உரையை தமிழில் மொழிபெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தும் புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் செயற்கை  நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பன்மொழி அணுகுலை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உரையை தமிழில் மொழிப்பெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத்   தளத்தைப் புதுச்சேரி பயன்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வீரச் சிறார் தின நிகழ்சியில் ஆற்றிய உரை, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அரங்கில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர்  என் …

Read More »