Tuesday, September 15 2026 | 01:30:55 PM
Breaking News

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்: பிரதமர்

Connect us on:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட்,  நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி கூறியதாவது:

“இந்தியா மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட்,  நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்து  மகிழ்ச்சி அடைந்தேன்.

மேதகு ஜார்ஜ் கார்டினல் கூவக்காட், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர சீடராக மனிதகுல சேவைக்கு  தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …