Tuesday, July 28 2026 | 07:15:00 AM
Breaking News

சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்

Connect us on:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக, பொது மக்கள்  மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை கோரும் வகையில், ‘சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கான வரையறை’ குறித்த ஆலோசனை அறிக்கை 02.05.2023 அன்று வெளியிடப்பட்டது.

மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள், பகுப்பாய்வு முடிவுகள் அடிப்படையில், இந்திய தொலைத்  தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சர்வதேச தொலைத் தொடர்பு சேவைக்கான வரையறை குறித்த பரிந்துரைகளை இறுதி செய்தது.

இந்த பரிந்துரைகளின் நகல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

வரலாற்றுப் பயணம்: செஷெல்ஸ் சுதந்திர தின பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் செஷெல்ஸ் நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக …