Friday, January 02 2026 | 03:19:12 AM
Breaking News

நாடாளுமன்ற கேள்வி: பார்வையற்ற சிறுவர், சிறுமியரின் கல்வி

Connect us on:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலின் 9வது அட்டவணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம் என்பது மாநில அரசின் பொறுப்பாகும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ மத்திய அரசு இயற்றியது. இது 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 16 & 17-ன் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியும், பிரிவு 31-ன் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.

டேராடூனில் உள்ள பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ உடன் இணைந்த, முதுநிலை இரண்டாம் நிலை மாதிரி பள்ளியை நடத்தி வருகிறது.

பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் அணுகக்கூடிய கற்றல் பொருட்கள் பின்வருமாறு:

1. இ-பப்/டெய்ஸி

2. மனித விவரிப்பை பதிவு செய்தல்

3. பெரிய அச்சு புத்தகங்கள்/ஆடியோ புத்தகங்கள்4.  சரிபார்ப்பு தேவை இல்லாமல் ஓசிஆர் கட்டமைப்பு இ-பப்

5. தொட்டுணரக்கூடிய வரைபடங்கள்

6. சுகம்யா புஸ்தகல்யா மூலம் ஆன்லைன் சேவை

இவை தவிர, பார்வையற்ற குழந்தைகளுக்கான கல்வி உட்பட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முக்கிய திட்டங்களையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது:

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …