Thursday, December 11 2025 | 08:51:28 PM
Breaking News

சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் – அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்

Connect us on:

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 73.13 கோடி ரூபாய் செலவில், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் -2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ்,
சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.