Monday, December 08 2025 | 01:37:56 PM
Breaking News

கூட்டுறவு சங்கங்களுக்கான மூலதனச் செலவு

Connect us on:

கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குதல்,  வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல், ஆர்.சி.எஸ் அலுவலகங்களை கணினிமயமாக்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ‘வணிகம் செய்வதை இது எளிதாக்கி உள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வெளிப்படையான காகிதமற்ற ஒழுங்குமுறைக்கான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குகிறது.

அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாநில அரசுகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட கட்டத்திலிருந்து, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அமைச்சகம் வழங்கும் நிதியைப் பயன்படுத்தும் வேகம் பெரும்பாலான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அதிகரித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.