Monday, December 08 2025 | 08:50:04 AM
Breaking News

முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வேலை வாய்ப்புகள்

Connect us on:

முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் போதுமான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் துறை, மத்திய துணை ராணுவப்படை போன்ற துறைகளில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு இ.எஸ்.எம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு மறுகுடியமர்வு / திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 27,78,951 ஆகும்.  இவர்களில் ராணுவத்தில்  24,02,715 பேரும், கடற்படையில்,  1,50,393 பேரும்,  விமானப்படையில் 2,25,843  பேரும் பணியாற்றியுள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை  1,20,523 பேர் முன்னாள் படை வீரர்களாக உள்ளனர். இவர்களில் முன்னாள் ராணுவத்தினர் 1,04,533 பேர், கடற்படையில் 4,015 பேரும், விமானப்படையில் 11,975 பேரும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அரசு ஏற்பாடு செய்கிறது. இது வேலையளிப்பவருக்கும் வருங்கால விண்ணப்பதாரருக்கும் இடையே நேரடித் தொடர்பை அளிக்கிறது. இதில்  நிகழ்விடத்திலேயே திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் கார்ப்பரேட் துறையில் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.