Monday, December 08 2025 | 06:12:43 PM
Breaking News

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்

Connect us on:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது  என்பதை உலக நாடுகள்  அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

புனேயில் இன்று கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தில் நடைபெற்ற 70ஆவது ஆண்டு கருத்தரங்கில் உரையாற்றிய திரு சவுகான், ஆராய்ச்சியாளர்களின் பணி ஆய்வகத்துடன் மட்டும் நின்றுவிடாமல், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் மிகவும் பழமையானது. வேளாண் துறையும் இதில் இணைந்துள்ளது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதி,  இந்தியா வழிநடத்தி வருவதாக அவர் கூறினார்.

நதிகள் இணைப்புத் திட்டத்தை 2024-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி  அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.   நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், சில பகுதிகள் வறட்சி போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதாகவும் திரு சௌகான் கூறினார். இத்தகைய சவால்களை சமாளிக்கும் வகையில், சிறப்பு நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். அதிக மழை பெறும் பகுதிகள் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் பகுதிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையும். குறைந்த நீரில் அதிக பாசனம் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றும் வேளாண் அமைச்சர் கூறினார். வேளாண் துறையை ஊக்குவிக்க உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு சவுகான், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 1.94 மெட்ரிக் டன் மானியம் வழங்கியதாக கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”