Tuesday, December 09 2025 | 07:40:47 PM
Breaking News

கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க முன்னோடித் திட்டம் – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்படுத்துகிறது

Connect us on:

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும்  விபத்துகளைத் தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த முயற்சி பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள், விலங்குகளின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் இது உறுதி செய்கிறது.

0.21 முதல் 2.29 ஹெக்டேர் வரையிலான தங்குமிடங்களுடன், கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை என்.எச்-334-பி-ன் உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லை முதல் ரோஹ்னா பிரிவு உட்பட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்.

இந்த முயற்சி குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், இந்த முயற்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை  உருவாக்குவது மட்டுமல்லாமல், கால்நடைகளை  கவனித்துக்கொள்வதற்கான மனிதாபிமான தேவையை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை …