Monday, December 08 2025 | 06:31:42 PM
Breaking News

உலகின் மிகப்பெரிய தேர்தலின் விரிவான தரவுத் தொகுப்புகளின் வெளியீடு

Connect us on:

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் அடித்தளமாக விளங்கும் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.  அதிகபட்ச தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தேர்தல் தொடர்பான தரவுகளை அணுகுதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஆணையத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயன்படுமாறு இந்த விரிவான தரவுத் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன.

 நாடாளுமன்ற தொகுதி/ சட்டமன்றத் தொகுதி/ மாநில வாரியான வாக்காளர்களின் விவரங்கள், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, மாநில / நாடாளுமன்ற தொகுதி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவு, கட்சி வாரியான வாக்குகள், பாலின அடிப்படையிலான வாக்களிப்பு, பெண் வாக்காளர்களின் மாநில வாரியான பங்கேற்பு, பிராந்திய வேறுபாடுகள், தொகுதி தரவு சுருக்க அறிக்கை, தேசிய/மாநில கட்சிகள் / பதிவு செய்துள்ள, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளின் செயல்திறன், வெற்றி பெற்ற வேட்பாளர்கள்  குறித்த பகுப்பாய்வு, தொகுதி வாரியான விரிவான முடிவுகள், உள்ளிட்ட பல்வேறு தரவுகள் இந்த வெளியீடுகளில் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் தற்போது ஆழமான நுண்ணறிவு, பகுப்பாய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக இந்தத்தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”