Monday, December 08 2025 | 02:26:54 AM
Breaking News

எட்டு முக்கிய தொழில் பிரிவுகளில் நிலக்கரித் துறை நவம்பர் 2024-ல் 7.5% வளர்ச்சியை அடைந்தது

Connect us on:

வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்)  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு 172.9 புள்ளிகளை எட்டியுள்ளது. இது அனைத்து எட்டு முக்கிய தொழில்களிலும் 6.4% அதிகபட்ச வளர்ச்சியைக் காட்டுகிறது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த செயல்திறனையும் தனிப்பட்ட செயல்திறனையும் ஐசிஐ அளவிடுகிறது.

எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது நவம்பர் 2024-ல் குறிப்பிடத்தக்க 4.3% அதிகரிப்பைக் கொண்டுள்ளது. ஏப்ரல்-நவம்பர் 2024 காலத்திற்கான குறியீடு 2023-24 நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 4.2% அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கு நிலக்கரி துறையின் கணிசமான பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி, ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு காரணமாகும். இந்தக் காலைட்டத்தில் உற்பத்தி 628.4 மில்லியன் டன்களை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6.4% குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. உற்பத்தியில் இந்த அதிகரிப்பு எரிசக்தி உற்பத்தித் தொழில் துறையின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு, நிலக்கரித் துறையின் முக்கியத் திறனை எடுத்துக் காட்டுகிறது.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.