Monday, December 08 2025 | 01:37:36 PM
Breaking News

டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை

Connect us on:

நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 97.665 மெட்ரிக் டன் அளவோடு ஒப்பிட 34.20% அதிகரிப்பைக் குறிக்கிறது.

2024 டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாதாந்திர நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 18.40 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சாதனை முந்தைய அனைத்து பதிவுகளையும் தாண்டிய சாதனையாகும். தினசரி சராசரி உற்பத்தி 0.594 மெட்ரிக் டன்னாகவும், 2023 டிசம்பர் மாதத்தில் தினசரி சராசரியான 0.445 மெட்ரிக் டன்னோடு ஒப்பிட 30.75% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2024 டிசம்பர் மாதத்தில் 17.67 மெட்ரிக் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டது. இது 2023 டிசம்பர்   மாதத்தில் தினசரி சராசரியான 0.426 மெட்ரிக் டன்னிலிருந்து 33.20% அதிகரிப்பைக் குறிக்கிறது.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.