Friday, September 18 2026 | 02:42:04 AM
Breaking News

சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025

Connect us on:

ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு ‘கங்கா’ என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறப்பது, புனித நதிகளின் தூய்மை மற்றும் சாரத்தை  நினைவூட்டுவதாக உள்ளது.. ‘கும்பமேளா’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. , இந்தப் பிறப்புகள் வாழ்க்கை வட்டத்தையும் மகா கும்பமேளா பண்டிகையின் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.. மகா கும்பமேளா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே செயல்படத் தொடங்கிவிட்ட இந்த மருத்துவமனை, உத்தரப்பிரதேச அரசின் துல்லியமான முன்தயாரிப்புகளுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையானது மஹா கும்பமேளாவின் புனிதத்தன்மை பாரம்பரியத்தை முன்னேற்றத்துடன் இணைத்து   மனித நலனுக்கான உறுதிப்பாட்டோடு    இருப்பதை  உறுதி செய்கிறது.

சனாதன தர்மத்தின் உச்சம் என்று போற்றப்படும் மகா கும்பமேளா, 2025-ம் ஆண்டில் பிரயாக்ராஜில் அதன் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும். “புனித யாத்திரைகளின் ராஜா” அல்லது தீர்த்ராஜ் என்று அழைக்கப்படும் பிரயாக்ராஜ், புராணங்கள், ஆன்மீகம் மற்றும் வரலாறு ஆகியவை சங்கமிக்கும் நகரமாகும், இது சனாதன கலாச்சாரத்தின் காலங்களைக் கடந்த உருவகமாக அமைகிறது. கங்கை, யமுனை மற்றும் புலன் உ ணர்வுக்கு அப்பாலான மாய உலகின் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இந்தப் புனித நிலம், தெய்வீக ஆசீர்வாதங்களையும் முக்யியையும் தேடும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆன்மீக காந்தமாகச் செயல்படுகிறது. இங்கே, பக்தி, தியானம் மற்றும் ஆன்மீகத்தின் திரிவேணி சங்கமத்துடன் மகா கும்பமேளா ஒரு தெய்வீகப் பயணமாக மாறுகிறது.

பிரயாக்ராஜின் ஆன்மீக ரத்தினங்களுக்கு மத்தியில் பரபரப்பான லோக்நாத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பாபா லோக்நாத் மஹாதேவ் கோயில்உள்ளது. காசியின் பாபா விஸ்வநாதரின் ‘பிரதிநிதி’ என்று போற்றப்படும் பாபா லோக்நாத்தின் கோயில் காலங்களைக் கடந்த  பக்தியின் எதிரொலிகளில் மூழ்கியுள்ளது. இந்த சுயம்புவான சிவலிங்கத்தைப் பற்றிய குறிப்புகள் ஸ்கந்த புராணம் மற்றும் மகாபாரதத்தில் காணப்படுகின்றன, இது அதன் பண்டைய வேர்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாபா லோக்நாத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவது உலகப் போராட்டங்களைத் தணிக்கும் என்று யாத்ரீகர்கள் நம்புகிறார்கள், மேலும் பிரமாண்டமான மகா கும்பமேளாவின் போது, தெய்வீகத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கானோர் இந்தப் புனித இடத்தில் கூடுவார்கள். மதன் மோகன் மாளவியா போன்ற பிரபலங்களுடனான தொடர்பால் இந்த கோயிலின் கலாச்சார பாரம்பரியம் மேலும் வளப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று அதன் சின்னமான சிவ பாரத் ஊர்வலம் மற்றும் துடிப்பான ஹோலி கொண்டாட்டங்கள் பிரயாக்ராஜின் ஆன்மீக உற்சாகத்தின் துடிப்பை உணர்த்துகின்றன. இந்த நகரம் மகா கும்பமேளாவிற்கு தயாராகி வரும் நிலையில், பாபா லோக்நாத்தின் கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு மையப் புள்ளியாக மாறும்.

கும்பமேளா நான்கு பரிமாணக் கொண்டாட்டமாக விவரிக்கப்படுகிறது – ஒரு ஆன்மீகப் பயணம், ஒரு தர்க்க அதிசயம், ஒரு பொருளாதார நிகழ்வு மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் ஒரு சானறு

2025-ம் ஆண்டில் சங்கமத்தின் புனித மணல் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு காத்திருக்கும் நிலையில்,மகா கும்பமேளா வேறு எங்கும் இல்லாத ஆன்மீக சாகசமாக இருக்கும்.  இது ஒருவர் தனது  வேர்களுடன் மீண்டும் இணைவதற்கும், சனாதன தர்மத்தின் காலங்களைக் கடந்த ஞானத்தை அனுபவிப்பதற்கும், இவ்வுலகத்தை மீறிய ஒரு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கும் ஒரு அழைப்பாகும். பாபா லோக்நாத்தின் தெய்வீக ஆசீர்வாதங்கள் முதல் மகரிஷி துர்வாசரின் புராண மரபு வரை, துறவிகளின் மனிதாபிமான பிணைப்புகள் முதல் வாழ்க்கையின் அற்புதங்கள் வரை, மகா கும்பமேளா நம்பிக்கை, பக்தி மற்றும் உன்னதத்தின் கலவையாகும்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …