Monday, December 08 2025 | 08:27:13 PM
Breaking News

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் புதிய சீர்திருத்தம்

Connect us on:

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக “இணைப்பு J” எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “இணைப்பு J” என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாகக் கோருகின்றனர். (மாதிரி “இணைப்பு J” படிவம் இணைக்கப்பட்டுள்ளது) படிவத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட கூட்டு புகைப்படத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இணைப்பு J இன் முக்கிய அம்சங்கள்

• தம்பதியினரின் கூட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படம்

• இருவரின் முழுப் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறந்த தேதிகள்

• திருமண நிலையின் தெளிவான அறிவிப்பு

• ஆதார் எண் மற்றும் வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் எண்  (இருந்தால்)

மறுமணத்திற்குப் பிறகு புதிய துணைவரின் பெயரைச் சேர்க்க விண்ணப்பதாரர்கள் பின்வரும் தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்:

  • விவாகரத்து ஆணை, மறுமணச் சான்றிதழ்
  • முன்னாள் துணைவரின் இறப்புச் சான்றிதழ், மறுமணச் சான்றிதழ்
  • புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள்

இந்த சீர்திருத்தம் இந்திய குடிமக்களுக்கான ஆவணத் தேவைகளை        எளிதாக்குவதன் மூலம் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான வெளியுறவு அமைச்ச உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கும் இணைப்பு J-ஐ பதிவிறக்கம் செய்யவும், அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடவும்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”