Friday, September 18 2026 | 06:01:34 PM
Breaking News

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவரும் அணுகக்கூடியது மற்றும் செலவு குறைந்தது: மக்களவைத் தலைவர்

Connect us on:

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவராலும் அணுகக்கூடியது மற்றும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா பாராட்டியுள்ளார். இன்று புதுதில்லியில் ஐபிஎஃப் மெடிகான் 2025 மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கலில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்த அவர், இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சுகாதாரத்தின் தரத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். சுகாதாரத் துறையில் உள்ள முன்முயற்சிகள் சுகாதார சேவைகளை மேலும் உள்ளடக்கியதாகவும் நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பரவல், டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள் மற்றும் மலிவு விலை சிகிச்சை ஆகியவற்றில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் பாராட்டினார், இது ஒரு வலுவான மற்றும் சமமான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். புதுதில்லியில் புதுமையான மருத்துவர்கள் மன்றத்தின் 7-வது ஆண்டு சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இன்று, வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொண்டாலும், இந்திய மருத்துவர்கள் புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்தி வருவதாக திரு பிர்லா  கூறினார். மருத்துவத் துறையில் அண்மை ஆராய்ச்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்க இந்த மன்றம் ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை, சிறந்த சுகாதார அமைப்பை உருவாக்கவும், மருத்துவத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது ஆராய்கிறது. இந்திய மருத்துவர்களின் நற்பெயர் மற்றும் தரம் உலகளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகம் இந்தியா கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை திறம்பட நிர்வகிக்கவும் வெற்றிகரமான சிகிச்சையை வழங்கவும் உதவியது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு உண்மையான சான்று என்று திரு பிர்லா சுட்டிக் காட்டினார்.

இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான மையமாக வளர்ந்து வருவதாகவும், நாட்டிற்குள் மருந்து உற்பத்தி, தடுப்பூசி உற்பத்தி மற்றும் உயிரிமருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கண்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர்,  சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை ஒரு முக்கிய நாடாக  நிலைநிறுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.  இந்தியாவின் திறமையான விஞ்ஞானிகள், உறுதியான ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை உலகளாவிய சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு பிர்லா குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் போன்ற முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என அவர் கூறினார்.

மருத்துவத் துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது காலத்தின் தேவை என்று கூறிய அவர்,  வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். புதிய சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், நோய் தடுப்பை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதும், மருத்துவ ஆராய்ச்சியில் முதலீடு செய்வதும் அவசியம் என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக சமூகத்திற்கும் பயனளிக்கும் முன்னேற்றங்களை இயக்க நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 இந்த மாநாடு வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல – இது மனித சேவைக்கான உலகளாவிய தளம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஆராய்ச்சி, புதுமை மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு ஐபிஎஃப் பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இங்கு நடைபெறும்  விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கருவிகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் பிற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கும் என்று கூறிய அவர், மனிதனை மையமாகக் கொண்ட, திறமையான சுகாதார அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நேபாளம், இலங்கை, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …