Monday, December 08 2025 | 06:44:14 PM
Breaking News

பாதுகாப்பு கணக்குத் துறையால் நடத்தப்படும் கணக்குக் கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு 2025: புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Connect us on:

பாதுகாப்பு கணக்குத் துறையின் (DAD -டிஏடி) கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு, 2025 ஜூலை 7 முதல் 9-ம் தேதி வரை புது தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் எஸ்கே கோத்தாரி அரங்கத்தில் நடைபெறுகிறது. 2025் ஜூலை 7-ம் தேதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படை, விமானப் படை, ராணுவம் ஆகியவற்றின் தலைமை தளபதிகள், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், நிதி ஆலோசகர் (பாதுகாப்பு சேவைகள்) திரு எஸ் ஜி தஸ்திதர், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் மயங்க் சர்மா உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள்.  இந்த மாநாடு இந்தியாவின் பாதுகாப்பு நிதி கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக அமையும்.

இந்த மாநாடு, பாதுகாப்பு மற்றும் நிதித் துறைகளில் உள்ள பாதுகாப்பு கணக்குத் துறையினர், சம்பந்தப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகள், கல்வித்துறையினர், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைக்கும். சவால்களை மதிப்பிடுவதற்கும், சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், பாதுகாப்புத் தயார்நிலையில் நிதி நிர்வாகத்தின் பங்கை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய தளமாக அமையும்.

இந்த மாநாட்டில் பட்ஜெட், கணக்கு சீர்திருத்தம், உள் தணிக்கை மறுசீரமைப்பு, கூட்டு ஆராய்ச்சி, விலை நிர்ணயத்தில் புதுமை, திறன் மேம்பாடு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய எட்டு உயர்மட்ட அமர்வுகள் இடம்பெறும். போட்டித்தன்மை வாய்ந்த, தன்னம்பிக்கை கொண்ட பாதுகாப்புத் துறைக்கு நிதி விவேகத்தை சமநிலைப்படுத்துவதில் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களின் வளர்ந்து வரும் பங்கை இந்த அமர்வுகள் ஆராயும்.

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததன் படி, இந்த மாநாடு, இந்தியாவின் பாதுகாப்பு நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும். தற்சார்பு இந்தியா என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மேலும் சிறந்த செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”