Sunday, December 07 2025 | 04:01:15 PM
Breaking News

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (i), 2024-ன் இறுதி முடிவுகள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Connect us on:

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில்  வெளியிடப்பட்டுள்ளன. (i) ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை, 121-வது குறுகிய கால சேவைகளுக்கான பயிற்சி வகுப்பு (ஆண்கள்) (என்.டி) (யு.பி.எஸ்.சி) மற்றும் (ii) ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை, 35-வது குறுகிய கால சேவைகளுக்கான பயிற்சி வகுப்பு பெண்கள் (தொழில்நுட்பம் சாராத பணிகள்) ஆகியோருக்கான பயிற்சிகள் 2025- ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம், எழிமலாவில் உள்ள கடற்படை பயிற்சி மையம், ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையம், ஹைதராபாத் ப்ரீ-ஃப்ளையிங் பயிற்சி பாடநெறி  ஆகியவற்றின் காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு அதே தேர்வு முடிவின் அடிப்படையில் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட சில விண்ணப்பதாரர்களின் பெயர்களும் 121-வது குறுகிய கால சேவைகளுக்கான பயிற்சி வகுப்பு (ஆண்கள்)  பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின்  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, (1) 121-வது குறுகிய பணிக்குழு பயிற்சி (ஆண்களுக்கு) 275 பேரும்  (II) 35-வது குறுகிய பணிக்குழுப் பயிற்சி மகளிர் (தொழில்நுட்பம் சாராத) படிப்புக்கு 18 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலில் வெளியிடப்பட்டு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அனைத்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்காலிகமானதாகும். இந்த விண்ணப்பதாரர்களின் பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதியை இராணுவத் தலைமையகம் சரிபார்க்கும்.

விண்ணப்பதாரர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான http://www.upsc.gov.in  என்ற முகவரியில் முடிவுகள் குறித்த தகவல்களைப் பெறமுடியும். இருப்பினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் 30 நாட்களுக்கு கிடைக்கும்.

மத்திய அரசின்  பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் தேர்வு மைய கட்டடத்திற்கு அருகில் உதவி மையத்தில் தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், 011-23385271, 011-23381125 மற்றும் 011-23098543 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு தொடர்பான விளக்கங்களை பெற முடியும்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”