Thursday, September 10 2026 | 07:55:45 PM
Breaking News

60 -நாட்கள் மீள்தன்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மனநலம் குறித்த பயிலரங்கை இந்திய கப்பல் படை நடத்தியது

Connect us on:

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி.கே.ஷிவானி தலைமையில், ‘சுய மாற்றம் மற்றும் உள் விழிப்புணர்வு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் டி.எஸ்.கோத்தாரி ஆடிட்டோரியத்தில் இந்திய கடற்படை 07 ஜனவரி 25 அன்று நடத்தியது. கடற்படை வீரர்களின் மன வலிமையை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சகோதரி பி.கே.ஷிவானியின் இரண்டு மணி நேர அமர்வானது மனநல விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி சமநிலையை வளர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தது.

சகோதரி பி.கே.ஷிவானி மனதின் செயல்பாடு மற்றும் உள் நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்த தனது ஆழமான நுண்ணறிவுத் திறனால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அவரது அதிவேக கலந்துரையாடல் அமர்வு மன அழுத்தத்தின் மூல காரணங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தியது. சுய விழிப்புணர்வு, தியானம் மற்றும் நேர்மறையான சிந்தனை மூலம் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து அவர் விளக்கினார்.  அமைதியான, நேர்மறையான மற்றும் அதிகாரமளிக்கும் எண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நமது அனுபவங்களை மாற்றி, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்க முடியும்.

வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக், இந்த முயற்சியைப் பாராட்டினார், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட நிறைவை உறுதி செய்வதில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கடற்படை வீரர்களின் மனநலன் அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த பணிச்சூழலுக்கு அடிப்படையானது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். சகோதரி பி.கே.ஷிவானியின் மனநல ஆலோசனைக்கான அர்ப்பணிப்புக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பயிலரங்கின் போதனைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க பங்கேற்பாளர்களை அவர் ஊக்குவித்தார்.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே மன ஆரோக்கியம் மற்றும் உள் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய கடற்படையால் தொடங்கப்பட்ட 60 நாள் மீள்தன்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பயிலரங்கு இருந்தது. பங்கேற்பாளர்களை நினைவாற்றலுடனும்  நேர்மறையுடனும் வழிநடத்த ஊக்கமளித்தது. இந்த செயலமர்வில் கடற்படை அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு சிவிலியன்கள் கலந்து கொண்டனர்.

பயிலரங்கின் பெரும் வெற்றி முழுமையான நல்வாழ்வு மற்றும் செயல்பாட்டு சிறப்பில் கடற்படையின் கவனத்தை வலுப்படுத்தியது.

இந்த நிகழ்வு இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, இந்த வளமான அமர்வு பல்வேறு பார்வையாளர்கள் பயனடைய உதவியது.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …