Friday, December 19 2025 | 09:35:40 AM
Breaking News

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜோத்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

Connect us on:

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜூன் 09 (திங்கட்கிழமை) அன்று ஜோத்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு  ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்வில், ஸ்ரீ பிர்லா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது விரிவுரை மண்டப வளாகத்தைத் திறந்து வைக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேந்திர கெலாட், சமூக சேவகர் திரு  நிம்பராம், புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும் ஐஐடி ஜோத்பூரின் ஆளுநர் குழுவின் தலைவருமான திரு  ஏ.எஸ். கிரண் குமார், ஐஐடி ஜோத்பூர் இயக்குநர் பேராசிரியர் அவினாஷ் கே. அகர்வால், துணை இயக்குநர் பேராசிரியர் பபானி கே. சத்பதி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.   திரு ஏ.எஸ். கிரண் குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார்.

ரூ 14.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அதிநவீன விரிவுரை மண்டப வளாகம், நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய திசையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்  போது, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமை தொடர்பான திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஆராய்ச்சி முயற்சி மானியத்தை’  திரு பிர்லா விநியோகிப்பார். கூடுதலாக, நிறுவனத்தின் புதிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் அவர் தொடங்குவார்.

மக்களவைத் தலைவர்,  அறிவியலை பிரபலப்படுத்த வடிவமைக்கப்பட்ட ‘விளையாட்டு மூலம் அறிவியல்’ காமிக் தொடரையும் வெளியிடுவார். இந்தத் தொடர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அறிவியல் சிந்தனையுடன் எளிமையான மற்றும் ஈர்க்கக்கூடிய மொழியில் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

மக்களவைத் தலைவரின்  இந்தப் பயணம், உயர்கல்வி, புதுமை மற்றும் அறிவியலை மக்களிடம் விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜோத்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT ஜோத்பூர்), 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமாகும். இது உயர்தர பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வழங்குவதற்காக பெயர் பெற்ற நிறுவனம் ஆகும்.

About Matribhumi Samachar

Check Also

காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துரையாடினார்

காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் …