Tuesday, December 09 2025 | 02:20:20 AM
Breaking News

“கலாசேது” என்ற நாடு தழுவிய முன்முயற்சியை வேவெக்ஸ் புத்தொழில் தொடங்கியுள்ளது; நிகழ்நேர பன்மொழி, பல் ஊடக உள்ளடக்க உருவாக்க தீர்வுடன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முன்னணி புத்தொழில் நிறுவனங்களுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது

Connect us on:

அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தகவல் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தீர்வுகளுக்கு வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இது மொழி அடிப்படையிலான பிளவுகளை இணைத்து நாடு முழுவதும் தொலைதூரப்பகுதிக்கும் தகவல் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்கிறது.

கலாசேது: இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம்

அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பயன்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமான வேவெக்ஸ் புத்தொழில் தளமானது “கலாசேது- இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம்” என்ற போட்டியை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மூன்று உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. முதலாவது தகவலில் இருந்து வீடியோ உருவாக்கம். இரண்டாவது தகவலில் இருந்து வரைகலை உருவாக்கம், மூன்றாவது தகவலில் இருந்து ஆடியோ உருவாக்கம்.

இந்தப் போட்டிக்கு புத்தொழில் நிறுவனங்கள் https://wavex.wavesbazaar.com என்ற வேவெக்ஸ் இணையப் பக்கத்தின் (போர்ட்டல்) மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் தயாரிப்பின் வீடியோ காட்சியுடன் 2025 ஜூலை 30-க்குள் குறைந்தபட்ச சாத்திய கோட்பாட்டை புத்தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக குறும்பட்டியலில் இடம்பெற்ற அணிகள் தங்களின் படைப்புகளை புதுதில்லியில் தேசிய நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.

பாஷா சேது போட்டி

பாஷா சேது நிகழ்நேர மொழிப் பெயர்ப்பு போட்டிகள் வேவெக்ஸ் மூலம் 2025 ஜூன் 30 அன்று  அறிவிக்கப்பட்டது. இதற்கு வேவெக்ஸ் போர்ட்டல் மூலம் 2025 ஜூலை 22 வரை  புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …