Wednesday, December 10 2025 | 09:54:28 AM
Breaking News

திருச்சி என்ஐடி-யில் ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்

Connect us on:

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இத்துறைகளில் பேராசிரியர்கள் தங்களின் அறிவுத் திறன்களை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதிலுமிருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 140 பங்கேற்பாளர்களை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ள ஒன்று கூடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எஃப் டி பி -யில் இந்தியாவிலிருந்து 10 சிறந்த பேச்சாளர்கள் மற்றும் கனடா மற்றும் ஸ்பெயினிலிருந்து 2 சர்வதேச நிபுணர்களைக் கொண்ட 13 தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டுள்ளது.

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேதியியல் பொறியியல் துறை, பேராசிரியர் (முனைவர்) டி. கே. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். என்.ஐ.டி. திருச்சியின் இயக்குநர் பேராசிரியர் (முனைவர்) ஜி. அகிலா, வேதியியல் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் எம்.அறிவழகன், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், ஆய்வு மாணாக்கர்கள், ஆசிரியப்
பெருமக்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து வருகை தந்த பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் (முனைவர்) எம்.அறிவழகன், தங்கள் துறை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து அறிமுக குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

வேதியியல் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் கே. சங்கர் நன்றி கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.