Monday, December 08 2025 | 12:00:22 AM
Breaking News

மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்

Connect us on:

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். 1000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ரேஷன் பொருட்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 20  வேன்கள் மூலம் மகாகும்பமேளா நகரத்திலும் பிரயாக்ராஜ் முழுவதிலும் விநியோகம் நடந்து வருகிறது.

ஆசிரமங்களுக்கும், பக்தர்களுக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை நடமாடும் வேன்கள் விநியோகிக்கின்றன. மகா கும்பமேளாவில் துறவிகள், கல்பவாசிகள், பக்தர்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, நடமாடும் வேன்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. எந்தவொரு பக்தரும் உணவு தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த சிறப்புத் திட்டம் கூட்டுறவு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது என்று நேஃபெட்-டின் (NAFED) மாநிலத் தலைவர் ரோஹித் ஜெயின் தெரிவித்தார். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதற்காக நேஃபெட்-டின் மேலாண்மை இயக்குநர் திரு தீபக் அகர்வால் மேற்பார்வையிடுகிறார்.

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 72757 81810 என்ற எண்ணில் அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் மூலம் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர்களை வழங்கலாம். மானிய விலையில் ரேஷன் பொருட்களில் கோதுமை மாவு, அரிசி 10 கிலோ பாக்கெட்டுகளிலும், பாசிப்பருப்பு, மசூர், கடலை பருப்பு ஆகியவை 1 கிலோ பாக்கெட்டுகளிலும் விநியோகிக்கப்படுகின்றன.  ஆணைகள் பெறப்பட்டவுடன் நடமாடும் ஊர்திகள் மூலம் ரேஷன் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆசிரமங்களுக்கும் துறவிகளுக்கும் உடனடியாக வழங்கப்படுகின்றன.

இதுவரை, 700 மெட்ரிக் டன் கோதுமை மாவு, 350 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் 10 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. நேஃபெட்டின் தயாரிப்புகளும் ‘பாரத் பிராண்ட்’ தானியங்களும் பக்தர்களிடையே விரைவாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக் கணக்கான பக்தர்களுக்கு உயர்தர ரேஷன் பொருட்களை அரசு வழங்குவது மட்டுமல்லாமல், இந்த செயல்முறையை வசதியாகவும் எளிதாகவும் அமைந்துள்ளது.  மகா கும்பமேளா 2025, ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு மறக்கமுடியாத சிறப்பான அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.