Monday, December 08 2025 | 03:28:53 AM
Breaking News

பருத்தி உற்பத்தி குறித்த சிறப்பு கூட்டம் கோவையில் ஜூலை 11 இல் நடைபெறும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் காணொளி செய்தியில் அறிவிப்பு

Connect us on:

பருத்தி உற்பத்திமுக்கிய பயிர் வகைகள் குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாகஜூலை 11-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டம் பற்றிய அறிவிப்பை  காணொலி செய்தி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது:

“பருத்தி பயிரிடும் அன்பான சகோதரிகளேசகோதரர்களே,

நாட்டின் பருத்தி உற்பத்தித்திறன் தற்போது குறைந்து வரும் சூழலில் அண்மைக் காலங்களில்பிடி ரக பருத்தியைப் பாதிக்கும் டிஎஸ்வி வைரஸ் காரணமாக உற்பத்தித்திறன் மேலும் குறைந்துள்ளது. பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்வைரஸ் தாக்குதல்களைத் தாங்கி வளரக்கூடியபருவநிலைக்கு ஏற்றஉயர்தர பருத்தி விதைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுஅதன் உற்பத்தி அதிகரிப்பதுடன்உள்ளீட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இது போன்ற  பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்ஜூலை 11-ம் தேதி காலை 10 மணிக்கு கோயம்புத்தூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்விவசாய அமைப்புகள்இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் உட்பட புகழ்பெற்ற விஞ்ஞானிகள்பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள்மாநில அரசு அதிகாரிகள்பருத்தித் தொழில்துறை

நிறுவனங்களின் பிரதிநிதிகள்வேளாண் பல்கலைக்கழக நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

எனதருமை சகோதரிகளேசகோதரர்களேபருத்தியின் உற்பத்தித்திறன்தரத்தை மேம்படுத்துவதற்கான வழி வகைகளைக் கண்டறிவதில் மத்திய அரசு பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இது தொடர்பாக தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கட்டணமில்லா தொலைபேசி எண் 18001801551-ல் தெரிவிக்கலாம்.  உங்களது ஆலோசனைகள்  பரிசீலிக்கப்படும்”. நாட்டின் பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டத்தை நாம் அவைரும் இணைந்து உருவாக்குவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”