Sunday, December 07 2025 | 12:18:28 AM
Breaking News

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அதிக நேரம் அவையில் இருந்து, அனைத்து விதமான கருத்துகளையும் கேட்டு, மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Connect us on:

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அனைத்துவிதக் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், இது பொதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதிலும் அவற்றுக்கு தீர்வு காண்பதிலும் பரந்த கண்ணோட்டத்தை வளர்க்க உதவும் என்று கூறினார்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களின் பங்கேற்பு குறைந்து வருவதாலும், அதன் விளைவாக ஏற்படும் அரசியல் முடக்க நிலை குறித்தும் கவலை தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டங்களின் போது, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் அதனால் ஏற்படும் உற்பத்தித்திறன் குறைவு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

சட்டப்பேரவைகளில் திட்டமிட்டு அமளி ஏற்படுத்துவது அரசியலமைப்பின் ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்ட திரு பிர்லா, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், கேள்வி நேரம் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பொதுப் பிரச்சனைகளை எழுப்புமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களை வலியுறுத்தினார். உறுப்பினர்கள் அவையில் விவாதங்களுக்கு உண்மைத் தகவல்களுடன் தயாராக வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். உறுப்பினர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு சிறப்பாக அவர்களின் பங்கேற்பு இருக்கும் என்றும், அவையின் நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் திரு பிர்லா கூறினார். சட்டமன்ற நடைமுறைகளைப் புரிந்துகொண்ட பிறகு, அவை நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்று, நன்கு கருத்துள்ள விவாதங்களில் ஈடுபடுபவரே சிறந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்று அவர் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”