Monday, April 13 2026 | 10:06:30 PM
Breaking News

உண்மையான, நடைமுறை ஆராய்ச்சிக்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு

Connect us on:

குடியரசு துணைத் தலைவர் திரு  ஜக்தீப் தன்கர் இன்று, அடிப்படை யதார்த்தத்தை மாற்றக்கூடிய உண்மையான மற்றும் நடைமுறை ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

பெங்களூரில் இன்று நடைபெற்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், “உலகப் பார்வையில், நீங்கள் பார்த்தால், நமது  காப்புரிமை பங்களிப்பு விரும்பத்தக்கதாக உள்ளது. ஆராய்ச்சி என்று வரும்போது, ஆராய்ச்சி உண்மையானதாக இருக்க வேண்டும். ஆய்வுகள் அதிவேகமாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி நடைமுறையில் இருக்க வேண்டும். ஆய்வுகள் அடிப்படை யதார்த்தத்தை மாற்ற வேண்டும். மேற்பரப்பிற்கு அப்பால் செல்லும் ஆராய்ச்சியால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் ஆராய்ச்சி நீங்கள் கொண்டு வர விரும்பும் மாற்றத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உங்கள் அமைப்பு இப்போது…..வடிவமைப்பிலிருந்து உற்பத்தி வரை குறைக்கடத்தி புரட்சியை வழிநடத்த வேண்டும்.  இது காலத்தின் தேவை.  உள்நாட்டு ஸ்டார்ட் அப்கள் மற்றும் உள்நாட்டு கூறுகளை மேம்படுத்துவதை வெறும் வார்த்தைகளாக பார்க்காதீர்கள். கையில் வைத்திருக்கும் ஸ்டார்ட்அப்களை அடையாளம் காணவேண்டும். சுதேசி கூறுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, மேலும் உள்நாட்டுமயமாக்கல் கொண்ட உபகரணங்கள் நம்மிடம்  அதிகளவில் உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புத்தாக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 “தேசம் திறமையால் நிறைந்துள்ளது. நமது இளைஞர்கள் மற்றும் பெண்கள், வாய்ப்புகளின் விரிவாக்கம் பற்றி அவர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை. அரசு வேலைக்காக நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, தேசிய கல்விக் கொள்கை ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.  நாம் திறன் சார்ந்தவர்களாக மாறி வருகிறோம். ஆனால் இப்போது மிகவும் அடிப்படையாக இருப்பது புதுமைகளை கண்டுபிடிப்பதற்கான ஆர்வம், ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஆர்வம்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அது தூண்டப்பட வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.

கர்நாடக ஆளுநர்  திரு  தாவர்சந்த் கெலாட், பிஇஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு மனோஜ் ஜெயின் மற்றும் பிற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

பணியிடப் பாதுகாப்பு, உள்ளடக்கம் மற்றும் நல்வாழ்வில் சிறந்து விளங்குவோரைக் கௌரவிக்கும் ‘CecureUs விருதுகள் 2025–2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

சென்னை, தமிழ்நாடு | ஏப்ரல் 2, 2026 பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் விதிகளைப் பின்பற்றும் பணியிடங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் …