Tuesday, December 09 2025 | 01:46:28 AM
Breaking News

குர்கானில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

Connect us on:

இளைஞர்கள் நிர்வாகத்தின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்குதாரர். நீங்கள் வளர்ச்சியின் இயந்திரங்கள். பாரதம் ஒரு வளர்ச்சி அடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்றால், 2047-ல் ஒரு வளர்ச்சி பாரதமாக இருக்க வேண்டும் என்றால், சவால்களைக் கடக்க வேண்டும். நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். மூன்றாவது இடத்தை நோக்கி செல்கிறோம். ஆனால் வருமானம் எட்டு மடங்கு உயர வேண்டும்,.அது ஒரு பெரிய சவால். மக்கள் 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அனுபவித்துள்ளனர். 500 மில்லியன் மக்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். 170 மில்லியன் பேருக்கு எரிவாயு இணைப்புகள் கிடைத்துள்ளன. இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகம்.

நமது இந்தியா மாறி வருகிறது. நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு நமது இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவைப் போல உலகில் வேறு எந்த நாடும் வேகமாக வளர்ந்ததில்லை.  எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். நீங்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.

இன்று ஒரு சிறந்த நாள். விவேகானந்தர் என்ன சொன்னார்? அவர் சிகாகோவில் இந்தியாவின் உள்ளடக்கத்துடன் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நகர்த்தினார்.  அவரிடமிருந்து சில மேற்கோள்களை நான் தருகிறேன்.

ஒன்று. “எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை ஓயாதே.”

அது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் அங்கீகாரம் தாமதமாக வருகிறது, சில நேரங்களில் நீங்கள் சென்ற பிறகு மக்கள் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற நபர்கள் சிலருக்கு மரணத்திற்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நம் நாட்டிலும் நாம் பல முறை தாமதிக்கிறோம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது காலம் மாறிவிட்டது. நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.  உங்களை நீங்களே நம்புங்கள், எந்த உயிருள்ள மனிதனும் அவனிடமோ அல்லது அவளிடமோ நல்லொழுக்கத்தைக் காணாவிட்டால்  மரியாதையைப் பெற முடியாது.

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …