Friday, September 18 2026 | 03:16:48 PM
Breaking News

குர்கானில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

Connect us on:

இளைஞர்கள் நிர்வாகத்தின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்குதாரர். நீங்கள் வளர்ச்சியின் இயந்திரங்கள். பாரதம் ஒரு வளர்ச்சி அடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்றால், 2047-ல் ஒரு வளர்ச்சி பாரதமாக இருக்க வேண்டும் என்றால், சவால்களைக் கடக்க வேண்டும். நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். மூன்றாவது இடத்தை நோக்கி செல்கிறோம். ஆனால் வருமானம் எட்டு மடங்கு உயர வேண்டும்,.அது ஒரு பெரிய சவால். மக்கள் 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அனுபவித்துள்ளனர். 500 மில்லியன் மக்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். 170 மில்லியன் பேருக்கு எரிவாயு இணைப்புகள் கிடைத்துள்ளன. இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகம்.

நமது இந்தியா மாறி வருகிறது. நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு நமது இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவைப் போல உலகில் வேறு எந்த நாடும் வேகமாக வளர்ந்ததில்லை.  எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். நீங்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.

இன்று ஒரு சிறந்த நாள். விவேகானந்தர் என்ன சொன்னார்? அவர் சிகாகோவில் இந்தியாவின் உள்ளடக்கத்துடன் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நகர்த்தினார்.  அவரிடமிருந்து சில மேற்கோள்களை நான் தருகிறேன்.

ஒன்று. “எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை ஓயாதே.”

அது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் அங்கீகாரம் தாமதமாக வருகிறது, சில நேரங்களில் நீங்கள் சென்ற பிறகு மக்கள் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற நபர்கள் சிலருக்கு மரணத்திற்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நம் நாட்டிலும் நாம் பல முறை தாமதிக்கிறோம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது காலம் மாறிவிட்டது. நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.  உங்களை நீங்களே நம்புங்கள், எந்த உயிருள்ள மனிதனும் அவனிடமோ அல்லது அவளிடமோ நல்லொழுக்கத்தைக் காணாவிட்டால்  மரியாதையைப் பெற முடியாது.

About Matribhumi Samachar

Check Also

அரியலூர் பள்ளி மாணவர்களுக்காக CSIR நடத்திய ‘ஜிக்யாசா அடல்’ இருநாள் அறிவியல் பயிலரங்கு: நேரடி செய்முறைப் பயிற்சிகள் அசத்தல்!

தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், “ஜிக்யாசா அடல்” …