Tuesday, December 09 2025 | 12:56:56 AM
Breaking News

ஜிஆர்ஏபி மீதான சிஏக்யூஎம் துணைக் குழு தில்லி தேசிய தலைநகர் பகுதியில் திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது

Connect us on:

தில்லியின் காற்றுத் தர சராசரி குறியீடு (AQI) தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 2 மணியளவில் அது 281 ஆகவும், 3 மணிக்கு 279 ஆகவும் பதிவானது. இது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வழங்கிய 4 மணி நிலவரத்தில் 278 ஆக மேலும் மேம்பட்டது. தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தில்லி, அருகிலுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் (CAQM -சிஏக்யூஎம்), தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) மீதான துணைக் குழு இன்று கூடியது.

இந்தப் பிராந்தியத்தில் தற்போதைய காற்றின் தர சூழ்நிலை, வானிலை நிலைமைகளுக்கான கணிப்புகள், வானிலை ஆய்வு மையம் வழங்கிய காற்றின் தரக் குறியீடு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தது, அதன்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பொருத்தமாக எடுக்கப்பட்ட திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டம் 09.01.2025 முதல் முழு தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (NCR) நடைமுறையில் உள்ளது. தில்லி-தேசிய தலைநகரப் பகுதியின் ஒட்டுமொத்த காற்றின் தர அளவீடுகளை விரிவாக ஆய்வு செய்த துணைக் குழு சில முடிவுகளை எடுத்துள்ளது.

தில்லி பகுதியில், மழை, சாதகமான வானிலை நிலைமைகள் காரணமாக தில்லியின் காற்றுத் தரக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தில்லியின் காற்றின் தரக்குறியீடு இன்று மாலை 4:00 மணிக்கு 278 ஆக பதிவாகியுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுகளின்படி மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான 350 புள்ளிக்கு கீழே 72 புள்ளிகள் குறைந்துள்ளது.

ஆகையால், திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் நிலை -III-ன் கீழ் கட்டுப்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜிஆர்ஏபி மீதான சிஏக்யூஎம் துணைக் குழு இன்று திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக திரும்ப பெற ஒருமனதாக முடிவு செய்தது.

அதே சமயம், திருத்தப்பட்ட ஜிஆர்ஏபி-யின் II,  I நிலைகளின் கீழ் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு, முழு தலை நகர் பகுதியில் சம்பந்தப்பட்ட அனைத்து முகவர்களாலும் கண்காணிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த துணைக்குழு, காற்றின் தர சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து, தில்லியில் உள்ள காற்றின் தரம், வானிலை நிலைமைகள், இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள காற்றின் தரக் குறியீடு ஆகியவற்றைப் பொறுத்து பொருத்தமான முடிவுகளுக்காக அவ்வப்போது நிலைமையை ஆய்வு செய்யும்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.