Monday, December 08 2025 | 08:26:23 AM
Breaking News

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சி மகா கும்பமேளாவில் இன்று தொடங்கியது; முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்

Connect us on:

பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் உள்ள கண்காட்சி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்களின் பங்கேற்புடன் கூடிய பொது நலன் சார்ந்த திட்டங்கள், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி  வைத்தது.

கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கானோர்  பார்வையிட்டனர்.

திரிவேணி சங்கமம் செல்லும் வழியில் உள்ள கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை  நடைபெறுகிறது .பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை கட்டணமின்றி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கண்காட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களும் அனமார்பிக் சுவர், எல்இடி திரைகள், எல்இடி சுவர், ஹாலோகிராபிக் சிலிண்டர் மூலமான டிஜிட்டல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கம்,  நமோ ட்ரோன் சகோதரி, லட்சாதிபதி சகோதரிகள், பிரதமரின்  வேலைவாய்ப்பு திட்டம், முத்ரா திட்டம், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், டிஜிட்டல் இந்தியா, பிரதமரின் வீட்டுவசதி திட்டம், வித்யாஞ்சலி, தற்சார்பு இந்தியா, திறன் இந்தியா, ஒரே பாரதம் உன்னத பாரதம், பிரதமரின் உஜ்வாலா திட்டம்,  குழாய்வழி குடிநீர் வழங்கல் திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டு இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் தற்சார்பு நிதித் திட்டம்,சுதந்திர இந்தியாவின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …