Monday, December 08 2025 | 05:55:54 PM
Breaking News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 75-வது பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம்: உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனில் மத்திய இணையமைச்சர் திரு. பி. எல். வர்மா தொடங்கி வைக்க உள்ளார்

Connect us on:

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில்  பிரதமரின் 75-வது மாற்றுத்திறனாளி சேவை மையத்தைத் திறந்து வைக்கவுள்ளது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடு தழுவிய முயற்சியின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக இது உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி. எல். வர்மா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி நிறுவனம், மாவட்ட நிர்வாக அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மதிப்பீடு, கணக்கீடு, ஆலோசனை, விநியோகம் மற்றும் விநியோகத்திற்குப் பிந்தைய பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தனித்துவ முயற்சியே பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம் ஆகும். இந்த மையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி நிறுவனம் வாயிலாக நிறுவப்படுகின்றன.

படாவுனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம் மற்றும் மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான உதவித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், நடைபயிற்சி கருவிகள், செயற்கை கால்கள் மற்றும் உடல் இயக்கத்திற்கான ஆதரவு பாகங்கள் போன்ற சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த மையம் தொடங்கப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் செயல்படும் பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 75 – ஐ எட்டியுள்ளது. மேலும், இந்த முயற்சியில் ஏற்கனவே 179.15 லட்ச ரூபாய்க்கும் கூடுதலான மதிப்புள்ள சாதனங்களை 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த மையம் உள்ளூர் பயனாளிகள் எதிர்கொள்ளும் பயணம் மற்றும் போக்குவரத்தில் உள்ள சவால்களை கணிசமாகக் குறைப்பதுடன், பிராந்திய அளவில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, கண்ணியமான சேவைகளை உரிய தருணத்தில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, ‘அணுகக்கூடிய இந்தியா, அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா’ மீதான மத்திய அரசின் வலுவான அர்ப்பணிப்பையும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  சேவை வழங்குவதன் மூலம் வளர்ச்சிக்கான அதன் தொலைநோக்குப் பார்வையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைகிறது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.