Friday, September 18 2026 | 08:53:47 PM
Breaking News

லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர் மிஸ்ரா தலைமை தாங்கினார்

Connect us on:

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் லோதலில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்தத் திட்டங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத்-தோலேரா பசுமைவழி விரைவுச் சாலையை டாக்டர் மிஸ்ரா பார்வையிட்டார். அகமதாபாத் – தோலேரா இடையேயான பயண நேரத்தை 45 நிமிடங்களாகக் குறைக்கும் விரைவுச் சாலையின் திறனை அவர் எடுத்துரைத்தார். மேலும் உலகத் தரமான சாலைத் திட்டங்கள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை குறிப்பிட்டார்.

தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில், டாக்டர் மிஸ்ரா, தோலேரா சர்வதேச விமான நிலையத்தின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார். சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் 2025 அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கும் என்று அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். காலக்கெடுவுடன் பணியை நிறைவு செய்யவும், விரைவுச் சாலையுடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

உள்நாட்டு சிப் உற்பத்தியில் ஒரு முதன்மை முயற்சியான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் குறைக்கடத்தி உற்பத்தி (ஃபேப்) திட்டத்தை டாக்டர் மிஸ்ரா ஆய்வு செய்தார். மொபைல் சாதனங்களுக்கான சிப்புகள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வாகன பயன்பாடுகள் உள்ளிட்ட அதன் உற்பத்தி நோக்கத்தை அவர் மதிப்பாய்வு செய்தார். தோலேரா தொழில்துறை நகர மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய சமூக உள்கட்டமைப்பு திட்டங்களை – பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களையும் அவர் பார்வையிட்டார். அவர் பயனர் அனுபவத்தை எடுத்துரைத்தார். பங்குதாரர் கருத்து ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

தோலேரா தொழில் துறை நகர மேம்பாட்டு நிறுவனம், தோலேரா சர்வதேச விமான நிலைய நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இந்திய ரயில்வே ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் டாக்டர் மிஸ்ரா ஒரு விரிவான மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அகமதாபாத்-தோலேரா விரைவுச் சாலை, பீம்நாத்-தோலேரா சரக்கு ரயில் போக்குவரத்து இணைப்பு, அகமதாபாத்-தோலேரா செமி-அதிவேக ரயில் பாதை, தோலேரா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். உலகத் தரத்திலான ஸ்மார்ட் தொழில்துறை நகரமாக தோலேராவை மேம்படுத்துவதற்கான குஜராத் அரசின் உறுதிப்பாட்டை திரு. மிஸ்ரா மீண்டும் வலியுறுத்தினார். திட்டத்தை சரியான நேரத்தில் முடித்தல், திறமையான பணியாளர்கள் கிடைப்பது மற்றும் வலுவான திட்டமிடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை முயற்சியான தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை டாக்டர் மிஸ்ரா ஆய்வு செய்தார். அவர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் செயலாளர் திரு. டி. ராமச்சந்திரன், குஜராத் கடல்சார் வாரியம், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் இந்திய ரயில்வே ஆகியவற்றின் பிற அதிகாரிகளுடன் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

நீர் மேலாண்மை அமைப்புகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நடவடிக்கைகளையும் திரு மிஸ்ரா மதிப்பாய்வு செய்தார். ஹரப்பா நாகரிகம் முதல் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை விவரிக்கும் கலைப்பொருட்களை ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் ஒப்பிடமுடியாத அளவு மற்றும் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். ஆறு காட்சியகங்கள் உட்பட கட்டம் I-ஏ கட்டுமானத்தையும் ஆய்வு செய்து, 2025 ஆகஸ்ட்  மாதத்திற்குள் அதை நிறைவு செய்ய உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது டாக்டர் மிஸ்ராவுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர் மற்றும் பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் திரு மங்கேஷ் கில்டியல் ஆகியோர் உடன் இருந்தனர்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …