Monday, December 08 2025 | 04:35:33 AM
Breaking News

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு நாளை கொண்டாடப்படுகிறது

Connect us on:

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு நாளை (18.02.2025) கொண்டாடப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தசாப்தம் நெருங்குவதை இந்த கொண்டாட்டம் குறிக்கிறது. எதிர்பாராத வகையிலான இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தப் பாதுகாப்பு விவசாயிகளின் வருவாயை சீராக்குவது மட்டுமின்றி, புதிய நடைமுறைகளை செயல்படுத்தவும், ஊக்கமளிக்கிறது.

இந்த திட்டத்தின் வெற்றி மற்றும் தேவையை அறிந்து பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தொடர்வதற்கும், வானிலை அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டு திட்டத்தை ரூ.69,515.71 கோடி பட்ஜெட்டுடன் 2025-26 வரை செயல்படுத்துவதற்கும் 2025 ஜனவரி மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கரீஃப் பருவ உணவுப் பயிர்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் தொகை 2 சதவீதமாகும். ரபி பருவ உணவுப் பயிர்கள் மற்றும் எண்ணெய் விதை பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச பிரீமியம் தொகை 1.5 சதவீதமாகும். வருடாந்தர வணிகப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான பிரீமியம் 5 சதவீதமாகும். எஞ்சிய தொகை மத்திய அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதற்கும், அவர்கள் கடன் வலையில் சிக்குவதை தடுப்பதற்கும், அறுவடை முடிந்த இரண்டு மாதங்களுக்குள் விவசாயிகளின் உரிமைகோரல் தொடர்பான நடைமுறைகளை முடிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விவசாயிகள் பயனடைவதற்கு உலகின் மிகப்பெரிய திட்டமாக இது விளங்குகிறது. விவசாயிகளின் சுமையை மேலும் குறைக்க சில மாநிலங்கள் விவசாயிகளின் பிரீமிய பங்கையும் தள்ளுபடி செய்கின்றன.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …