Friday, September 18 2026 | 11:51:43 PM
Breaking News

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சார்பில் இரண்டு ஆய்வு மையங்கள் – துணைவேந்தர் திறந்து வைத்தார்

Connect us on:

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் கீழ் இரண்டு முன்னோடி ஆராய்ச்சி மையங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார். அகாமிக் ஆய்வுகள் மற்றும் பாறைக் கலை மற்றும் அறிவாற்றல் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்ந ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு வரலாற்றுத் துறையின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு புதிய ஆராய்ச்சி மையங்களை திறந்து வைத்தார். இவை ஒன்றாண்டு முதுகலை டிப்ளோமா பாடத்திட்டத்துடன் செயல்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர், இன்றைய பொருள்முதல்வாதக் காலப்பிரிவில் சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தனித்துவமிக்கதாகவும் இந்த இரு மையங்கள் அமைந்துள்ளன என்று கூறினார்.  இரு மையங்களைத் தொடங்கியதற்காக வரலாற்றுத் துறைக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அகாமிக் ஆய்வுகள் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளுக்கான மையம், இடைக்கால இந்திய சமூகத்தில் கோயில்களின் பங்கு மற்றும் பல்வேறு சமூகங்களின் தொழில்முறை கலைகள், கைவினைக் கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் அகாம நூல்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

 பாறைக் கலை மற்றும் அறிவாற்றல் ஆய்வு மையம், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் மனித இனத்தின் அறிவாற்றல் வளர்ச்சியின் சித்திர சான்றுகளாக விளங்கும் ஓவியங்கள் மற்றும் செதுக்கல்கள் குறித்து ஆய்வு செய்கிறது. இவை மனித அறிவின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் முக்கிய ஆதாரங்களாகும். பழங்காலத்தில் இவ்வகை ஓவியங்கள், இளம் வேட்டைக்காரர்களுக்கு விலங்குகளின் நடத்தை முறைகளை கற்றுக்கொடுத்த ஒரு பயிற்சிக் கருவியாகவும் இருந்தன. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டிப்ளோமா பாடத்திட்டம் கள ஆய்வுகளுடன் கூடியது. இந்திய மற்றும் உலகளாவிய பாறைக் கலை மரபுகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா துறைகளில் வேலைவாய்ப்பு பெறத் தேவையான

திறன்களையும் பெறுவர். மேலும், பாறைக் கலை தளங்களை நிர்வகிக்கக்கூடிய தகுதிப்பட்ட வல்லுநர்களாக உருவாக்கப்படுவர். இந்த இரண்டு மையங்களையும் திறந்தமைக்கு ஆதரவளித்த வரலாற்றுத் துறை பேராசிரியர்களுக்கு துணைவேந்தர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், இவை தொடர்பான டிப்ளோமா படிப்புகளுக்கான சேர்க்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

அரியலூர் பள்ளி மாணவர்களுக்காக CSIR நடத்திய ‘ஜிக்யாசா அடல்’ இருநாள் அறிவியல் பயிலரங்கு: நேரடி செய்முறைப் பயிற்சிகள் அசத்தல்!

தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், “ஜிக்யாசா அடல்” …