Tuesday, December 23 2025 | 08:23:10 AM
Breaking News

சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது

Connect us on:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக  விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் படிப்புகளில் அறிமுகப்படுத்திய பெருமை சென்னை ஐஐடி-க்கு உண்டு. விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். தகுதியான மாணவர்கள் தங்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கும் அதேவேளையில் உயர்கல்வியைத் தொடர இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

தேசிய அளவில் சாதனை படைத்து இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஐந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை என்பது இளம்குழந்தைகளை சிறு வயதிலேயே  விளையாட ஊக்குவித்தல் அவசியம் என்ற முக்கிய செய்தியைத் தெரிவிக்கும் ஐஐடி மெட்ராஸின் முன்முயற்சியாகும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரையும் இது சென்றடையும் என நான் மனதார நம்புகிறேன்” என்றும்  தெரிவித்தார்.

2024-25-ம் கல்வியாண்டில் ‘விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சேர்க்கை’ பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஐந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள்:

  1. மகாராஷ்டிராவைச் சேர்ந்த செல்வி அரோஹி பாவே (கைப்பந்து வீராங்கனை) – பி.எஸ் (மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  2. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரு ஆர்யமான் மண்டல் (வாட்டர் போலோ-நீச்சல் வீரர்) – பி.டெக் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  3. தில்லியைச் சேர்ந்த செல்வி நந்தினி ஜெயின் (ஸ்குவாஷ் வீராங்கனை) – பி.டெக் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  4. தில்லியைச் சேர்ந்த திரு பிரபாவ் குப்தா (டேபிள் டென்னிஸ் வீரர்) – பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்
  5. ஆந்திராவைச் சேர்ந்த திரு வங்கலா வேதவச்சன் ரெட்டி (டென்னிஸ் வீரர்) – பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில் சேர்க்கப்பட்டார்.

About Matribhumi Samachar

Check Also

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சார்பில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இன்று (21.12.2025) உலக தியான தினத்தைக் கொண்டாடியது. இதனையொட்டி, புகழ்பெற்ற அறிஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற சிறப்பு தியான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தை நீக்குவதில் பழங்கால யோக ஞானம், நவீன மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் காஷிநாத் சமகாந்தி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் தியானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீத மன அழுத்தம் தொழில் சார்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார்.  புது தில்லியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த சுவாமி முக்திமாயனந்தா பேசுகையில் நிலையான அமைதிக்காக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  கர்வம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசைகள் போன்றவற்றை வெற்றி கொள்ள, முறையான பயிற்சிகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார் . பல்வேறு தியான நுட்பங்களின் நடைமுறை செயல் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. “ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவதற்காக அன்றாட வாழ்வில் தியானத்தை இணைப்பதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. யோகா, தியான ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு தனிநபரும் உயர்ந்த உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், …