Sunday, July 20 2025 | 02:38:58 AM
Breaking News

‘ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர்’ — டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பை நினைவு கூர்தல்: அவரது தியாக தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

Connect us on:

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி “நினைவு தினம்) அவருக்கு மரியாதை செலுத்தினார், “நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். நமது மண்ணின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான, டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினம்  இன்று. அவர் ஒரு முழக்கத்தை வழங்கினார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர் என்ற முழக்கத்தை எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தின் கௌதம் புத்தா நகரில் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம்  ஏற்பாடு செய்திருந்த 99-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசிய மாநாட்டின் (2024–2025) தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு தன்கர், நாம் நீண்ட காலமாக 370-வது பிரிவால் பாதிக்கப்பட்டோம். அது நம்மையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் ரத்தம் சிந்தச் செய்தது. 370-வது பிரிவும், கொடூரமான 35-ஏ பிரிவும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தன. தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும், சர்தார் படேல் போன்ற உள்துறை அமைச்சர்  அமித் ஷாவும் நமக்கு இருந்தனர். 370-வது பிரிவு இப்போது நமது அரசியலமைப்பில் இல்லை. அது ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது, மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான சட்டரீதியான சவால் டிசம்பர் 11, 2023 அன்று தோல்வியடைந்தது. எனவே, நமது மண்ணின் சிறந்த மைந்தர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இதை விட பொருத்தமான இடத்தில் நான் இருக்க முடியாது. அவருக்கு எனது மரியாதை” என்று கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்ட அவர்,  “3 தசாப்தங்களுக்கும் மேலாக நமது கல்வியின் நிலப்பரப்பையே மாற்றியமைத்த ஒரு விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் ‘தேசிய கல்விக் கொள்கை’ 2020 பற்றி குறிப்பிடுகிறேன். மேற்கு வங்க மாநில ஆளுநராக, நான் அதனுடன் தொடர்புடையவன். இந்தக் கொள்கையின் பரிணாம வளர்ச்சிக்கு சில முக்கிய உள்ளீடுகள் – ஆயிரக்கணக்கானோரின் கைகளில் – பரிசீலிக்கப்பட்டன.” என்றார்.

“இந்தக் கொள்கை நமது நாகரிக உணர்வு, சாராம்சம் மற்றும் நெறிமுறைகளுடன் எதிரொலிக்கிறது. கல்வி என்பது சுயத்தை எழுப்புவது – திறன்களைக் கற்பிப்பதற்காக மட்டுமல்ல என்ற இந்தியாவின் காலத்தால் அழியாத நம்பிக்கையை இது தைரியமாக மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கல்வி என்பது ஒரு சிறந்த சமநிலைப்படுத்தும் சாதனம் என்று நான் உறுதியாக நம்பினேன். வேறு எந்த வழிமுறையும் செய்யாதது போல் கல்வி சமத்துவத்தைக் கொண்டுவருகிறது.  உண்மையில், கல்வி ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கிறது.” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் தேசிய முன்னேற்றத்தைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், “ வாய்ப்புகள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், புதுமைகள், யூனிகார்ன்கள் ஆகியவற்றின் நிலமாக இந்தியா உருவெடுத்துள்ளது. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அளவிடக்கூடிய ஒவ்வொரு அளவுருவிலும், நாம் உயர்ந்து வருகிறோம்” என்றார்.

 “நமது பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குவதற்காக மட்டும் அல்ல. பெறுகின்ற  பட்டங்கள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் சரணாலயங்களாக, புதுமையின் பிறப்பிடங்களாக இருக்க வேண்டும். இந்த இடங்கள் பெரிய மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்.”  என்று பல்கலைக்கழகங்களின் பங்கு குறித்து, குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்,

“நமது பண்டைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமது வளமான கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறோம். கற்பிப்பதற்காக மட்டுமல்லாமல் முன்னோடியாகவும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை பாரதம் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. இவை வெறும் துறைகள் அல்ல. இவை வரவிருக்கும் எல்லா காலங்களிலும் நமது இறையாண்மையை உறுதி செய்வதற்கான நெம்புகோல்கள்.” என அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் துறைகளில் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான அழைப்போடு தமது உரையை நிறைவு செய்த குடியரசு  துணைத் தலைவர் “செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், பருவநிலை தொழில்நுட்பம், குவாண்டம் அறிவியல், டிஜிட்டல் நெறிமுறைகள் போன்ற வளர்ந்து வரும் களங்களில் சமரசமற்ற சிறந்த நிறுவனங்களை நிறுவுங்கள் – அப்போது பாரதம் வழிநடத்தும், மற்றவை பின்பற்றும். அது ஒரு சவால்.” என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் அமைச்சர் திரு  சுனில் குமார் சர்மா, அமிட்டி கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவின் நிறுவனர் தலைவர் டாக்டர் அசோக் கே. சௌஹான்,  ஏஐயு தலைவர் பேராசிரியர் வினய் குமார் பதக்,  ஏஐயு பொதுச் செயலாளர் டாக்டர் (திருமதி) பங்கஜ் மிட்டல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

வாரணாசியில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் ‘இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை’ மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், “இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும். அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.