Thursday, April 02 2026 | 04:33:05 AM
Breaking News

ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவியம் கலை படைப்பை அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்குக் கொண்டு செல்கிறது

Connect us on:

ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவிய கலை படைப்பை, அதன் பொருட்கள் அனுப்பும் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி, அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றது.

பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியம் கலை பாணியில், விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்ட தங்க அடித்தளத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், தனித்துவமான கலை மற்றும் பாரம்பரிய மதிப்பைக் கொண்ட ஒரு விலைமதிப்பற்ற கலாச்சார கலைப் பொருளாகும். இந்தப் புனித கலைப்படைப்பை,  பெங்களூருவைச் சேர்ந்த திருமதி ஜெயஸ்ரீ ஃபனீஷ், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

12×8 அடி அளவும், கிட்டத்தட்ட 800 கிலோ எடையும் கொண்ட இந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல அடுக்கு குமிழி உறையுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மரப் பெட்டியில் இந்த படைப்பு பேக் செய்யப்பட்டது. கலைப் படைப்பைத் தாங்கிய வாகனம், டிசம்பர் 17, 2025 அன்று பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, தோராயமாக 1,900 கிலோமீட்டர்களைக் கடந்து, டிசம்பர் 22, 2025 அன்று பாதுகாப்பாக அயோத்தியை அடைந்தது. இதைத் தொடர்ந்து, ஓவியம் முறையாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் பொதுச் செயலாளர் திரு சம்பத் ராய் முன்னிலையில் நிறுவப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …