Tuesday, December 09 2025 | 11:05:38 AM
Breaking News

பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்

Connect us on:

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர்  விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார்.

இது ஏர்பஸ் மற்றும் போயிங் 737  விமானங்களுக்கு சக்தி அளிக்கும் லீடிங் எட்ஜ் ஏவியேஷன் ப்ராபல்ஷன் எஞ்சின்களுக்கான சாஃப்ரானின் பிரத்யேக பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (எம்ஆர்ஓ) வசதியாகும். இந்த தொழிற்சாலையை நிறுவுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, ஏனெனில் இது மிகப்பெரிய உலகளாவிய விமானங்களுக்கான எம்ஆர்ஓ வசதிகளில் ஒன்றாகும், ஆனால் முதல் முறையாக, ஒரு உலகளாவிய இயந்திர அசல் உபகரண உற்பத்தியாளர்  இந்தியாவில் ஒரு எம்ஆர்ஓ செயல்பாட்டை அமைத்துள்ளது.

ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா மண்டலத்துக்குள்  45,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அதிநவீன வசதி, சுமார் ரூ1,300 கோடி ஆரம்ப முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 300 லீப்  இயந்திரங்களுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்ட  வசதி, 2035-ம் ஆண்டுக்குள் முழு செயல்பாட்டு திறனை அடைந்தவுடன் 1,000 க்கும் மேற்பட்ட உயர் திறமையான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணியமர்த்தும். உலகத்தரம் வாய்ந்த இயந்திரப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்க இந்த வசதி மேம்பட்ட செயல்முறை உபகரணங்களைக் கொண்டிருக்கும்.

எம்ஆர்ஓ வசதி விமானத் துறையில் தற்சார்பு இலக்கை நோக்கி ஒரு பெரிய படியாக இருக்கும். எம்ஆர்ஓ-வில் உள்நாட்டு திறன்களை வளர்ப்பது அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைக்கும். அதிக மதிப்புள்ள வேலைவாய்ப்பை உருவாக்கும், விநியோகச் சங்கிலி மீள்தன்மையை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை உலகளாவிய விமான மையமாக நிலைநிறுத்தும். இந்தத் துறையின் விரைவான வளர்ச்சியை ஆதரிக்க ஒரு வலுவான எம்ஆர்ஓ சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2024-ல் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், எம்ஆர்ஓ வழிகாட்டுதல்கள் 2021 மற்றும் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை 2016 உள்ளிட்ட அரசின் முக்கிய கொள்கை முயற்சிகள், வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவது மூலமும், ராயல்டி சுமைகளைக் குறைப்பதன் மூலமும் எம்ஆர்ஓ வழங்குநர்களுக்கான செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …