Monday, December 08 2025 | 07:58:01 AM
Breaking News

கரிம பருத்தி சான்றிதழ் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகள் – அபேடா மறுப்பு

Connect us on:

தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டம் (NPOP – என்பிஓபி திட்டம்), மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வணிகத் துறையால் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்காக 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) செயல்படுகிறது. சிறு, குறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சான்றிதழ் முறை அவசியம் என்று கருதப்பட்டதால், விவசாயிகள் குழுச் சான்றிதழ் முறை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கரிமப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மூன்றாம் தரப்பு சான்றிதழ் கட்டாயத் தேவையாகும். பயிர் உற்பத்திக்கான என்பிஓபி திட்டத்தின் தரநிலைகள் ஐரோப்பிய ஆணையம் மற்றும் சுவிட்சர்லாந்தின் தரநிலைகளுக்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனாலும் இந்த தர நிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

என்பிஓபி திட்டத்தின் கீழ் ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பால் (அரசு அல்லது தனியார்) கரிம பொருட்களுக்குச் சான்றளிக்கப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்புகள், அவர்களின் அளவீடுகளின்படி சான்றளிக்கின்றன. தற்போது, இந்தியாவில் 37 அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றில் 14 மாநில சான்றிதழ் அமைப்புகள் அடங்கும்.

இதில், என்பிஓபி-யின் கீழ் இயற்கை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அபேடா அல்லது வர்த்தகத் துறை எந்த மானியத்தையும் வழங்குவதில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.  கரிமச் சான்றிதழ் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ளது. சமீபத்திய பதிவுகளின்படி கீழ் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்புகளால் சான்றளிக்கப்பட்ட சுமார் 19,29,243 விவசாயிகளை உள்ளடக்கிய 4712 கரிமச் சாகுபடியாளர் குழுக்கள் உள்ளன. இந்த விவசாயிகள் குழுக்கள் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தேயிலை, காபி, மசாலாப் பொருட்கள், பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

சரிபார்ப்பு நடைமுறைகள் உள்ள போதிலும், விவசாயி குழு சான்றிதழில் முறைகேடுகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த வகையான இணக்கமின்மைகள் தொடர்பாக அதிகாரிகளால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

* என்பிஓபி தரநிலைகளுடன் இணக்கமின்மை, விதி மீறல் புகார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கண்காணிப்பு, மொபைல் செயலி மூலம் விவசாயிகள் குழுக்களை ஆய்வு செய்தல் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

* கரிம பருத்தி உற்பத்தியின் சான்றிதழுக்கான கூடுதல் சோதனைகளுக்கு புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

* கடமை தவறிய சான்றிதழ் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* என்பிஓபி-யின் கீழ் உள்ள கரிம சான்றிதழ் அமைப்பு நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தெளிவாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு அபேடா உறுதிபூண்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பின்போது, தேசிய கரிம உற்பத்தித் திட்டமான கரிமச் சான்றிதழ் திட்டத்திற்கு (NPOP) எதிராக ஆதாரமற்ற, தவறான கருத்துகளைக் கூறியிருந்தார். நாட்டின் வலுவான ஒழுங்குமுறை அமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது, சட்டபூர்வமான ஒழுங்குமுறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும், நாட்டின் இயற்கை வேளாண் (கரிம) இயக்கத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …