Sunday, December 07 2025 | 11:34:51 PM
Breaking News

ஒய்எஸ்ஆர் கடப்பாவில் ஆஸ்பைரேஷனல் மாவட்ட திட்டத்தின்கீழ் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்

Connect us on:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது பயணத்தின் போது ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய முன்முயற்சியின் கீழ் ஒய்எஸ்ஆர் கடப்பா ஒரு ஆஸ்பைரேஷனல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை, உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் உற்பத்தி சாதனைகளை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்தியது. சமூக-பொருளாதார குறியீடுகளை மேம்படுத்துவதில் மாவட்டத்தின் சிறப்பான முன்னேற்றத்தை டாக்டர் ஜிதேந்திர சிங்,பாராட்டினார்.

ஒய்எஸ்ஆர் கடப்பாவை ஆந்திரப் பிரதேசத்தில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, கூட்டு ஆளுகையின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த மாவட்டத்தில் 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளது. இது மாநில, தேசிய அளவிலான சராசரிகளைவிட அதிகமாகும். மேலும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு  0.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 9-11 மாத வயதுடைய குழந்தைகளுக்கு தற்போது 99% முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் 96% கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பகால கவனிப்பைப் பெறுவதால், ஒய்எஸ்ஆர் கடப்பா, தாய்-சேய் சுகாதார அம்சங்களில் இலக்குகளை எட்டியுள்ளது. ஊட்டச்சத்து இயக்கம், ஆயுஷ்மான் பாரத் போன்ற முன்னோடித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதும், வலுவான உள்ளூர் சுகாதார உள்கட்டமைப்பும் இந்த சாதனைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.