Sunday, December 07 2025 | 03:29:55 AM
Breaking News

இந்திய தர நிர்ணய அமைவனம் 78-ம் ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடியது

Connect us on:

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 78-ம் ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ‘அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன்’ என்ற வழிகாட்டுதல் கொள்கைக்கு ஏற்ப மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர தயாரிப்புகள் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்துவதே தரமான சூழல் அமைப்பின் அடித்தளம் என்று அவர் மேலும் கூறினார். நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறிதும் பாதிப்பில்லாத குறைபாடுகள் இல்லாத தரமான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றம் அதன் சுயமான தரங்களால் தீர்மானிக்கப்படும் என்பதோடு அவை உலகளவில் அங்கீகரிக்கப்படும்  என்றும் அவர் கூறினார்.

பைகள் முதல் இயந்திரங்கள் வரை, பொறியியல் முதல் மருத்துவப் பொருட்கள் வரை ஒவ்வொரு துறையிலும் 23,500-க்கும் மேற்பட்ட தரநிலைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திரு ஜோஷி கூறினார்.

இதுவரை 44.28 கோடி தங்கம், நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நுகர்வோர் கோரிக்கை உள்ளது என்று கூறிய திரு ஜோஷி, இது குறித்து பிஐஎஸ் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகிய முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவதில் பிஐஎஸ்-ன் பாரம்பரியம் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்காக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …