Friday, September 18 2026 | 10:41:40 PM
Breaking News

சேவை நீட்டிப்புகள் வரிசையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – குடியரசு துணைத்தலைவர்

Connect us on:

“சேவை நீட்டிப்பு, குறிப்பிட்ட பதவிக்கு எந்த வடிவத்திலும் நீட்டிப்பு என்பது வரிசையில் இருப்பவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது எதிர்பார்ப்பின் தர்க்கரீதியான கொள்கையை மீறுகிறது. சில தனிநபர்கள் இன்றியமையாதவர்கள் என்பதை நீட்டிப்பு குறிக்கிறது. இன்றியமையாமை என்பது ஒரு கட்டுக்கதை. இந்த நாட்டில் திறமைகள் அதிகம். யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’’ என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்களின் 25வது தேசிய மாநாட்டில்  தொடக்க உரையாற்றிய அவர்,“மிகக் கட்டுப்பாடுடன் ஒரு அம்சத்தைப் பற்றி சிந்திக்கிறேன். பொது தேர்வாணையங்கள் , நியமனத்தை அனுசரணையால், ஆதரவால் இயக்க முடியாது என்று கூறினார்.

ஓய்வுக்குப் பிந்தைய ஆட்சேர்ப்பு ஒரு பிரச்சனை. சில மாநிலங்களில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், குறிப்பாக பிரீமியம் சேவைகளில் இருப்பவர்கள் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை,

வினாத்தாள் கசிவு  ஒரு அச்சுறுத்தல். நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். காகிதக் கசிவுகள் இருந்தால், உங்கள் தேர்வின் நேர்மைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. காகிதக் கசிவு ஒரு தொழிலாக, வணிகமாக மாறிவிட்டது. மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்வு பற்றிய அச்சத்திலேயே இருக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில்  அரசியல் மிகவும் பிளவுபடுகிறது, மிகவும் துருவப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புகளில் பிரீமியம் மட்டத்தில் தொடர்பு நடைபெறவில்லை. தேசம் என்று வரும்போது, உலகம் மாற்றும் கட்டத்தில் இருக்கும்போது, அது இந்தியாவின் நூற்றாண்டு. அந்த நூற்றாண்டை மக்கள் நலனுக்காக முழுமையாகப் பலனளிக்க முடியும். நாம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தை விட, அரசியல் பிளவு, அரசியல் சூழல் மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.

“அரசியலில் நல்லிணக்கம் என்பது விருப்பமான சிந்தனை மட்டுமல்ல, விரும்பத்தக்க அம்சம். நல்லிணக்கம் இன்றியமையாதது. அரசியலில் நல்லிணக்கம் இல்லாவிட்டால், அரசியல் துருவப்படுத்தப்பட்டால், ஆழமாக பிளவுபட்டால், தகவல் தொடர்பு சேனல்கள் செயல்படாமல் இருந்தால், நீங்கள் ஒரு பூகம்பத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், நீங்கள் தொலைந்துவிட்டீர்கள் மற்றும் வெளி உலகத்துடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றால், விஷயங்கள் உங்களுக்கு மோசமாக இருக்கும் என்று  அவர் மேலும் கூறினார்.

நிறுவனங்கள் பலவீனமடைந்தால், நலிவடைந்தால் பாதிப்பு ஒட்டுமொத்த தேசத்திற்கே. ஒரு நிறுவனத்தை பலவீனப்படுத்துவது உடலில் குத்துவது போன்றது. உடம்பு முழுவதும் வலி இருக்கும். எனவே, நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அவை ஒருங்கிணைந்த முறையில் இருக்க வேண்டும். தேசிய நலன் என்று வரும்போது அவை ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்திருக்க வேண்டும்”என்று அவர் கூறினார்.

கர்நாடக ஆளுநர் திரு  தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு  சித்தராமையா,  யுபிஎஸ்சியின் தலைவர் திருமதி ப்ரீத்தி சுதன், ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் திரு அலோக் வர்மா, கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் திரு சிவசங்கரப்பா எஸ். சாஹுகர் மற்றும் பிற உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …