வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், விண்வெளி ஆய்வில் நாடு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“வரலாற்று சிறப்புமிக்க 100-வது ராக்கெட் செலுத்துதலுக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்!.
இந்த மகத்துவமான செயல் நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்கு, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
தனியார் துறை இணைவதன் மூலம், இந்தியாவின் விண்வெளிப் பயணம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும்.”
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

