Monday, December 08 2025 | 09:08:42 AM
Breaking News

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்

Connect us on:

சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமை தாங்கினார்.

மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையால் செயல்படுத்தப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், நிர்பயா நிதியின் கீழ் நிதியளிக்கப்படும், பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 33 மாவட்டங்களில் 50 சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியிருக்கிறது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்தூர், உஜ்ஜைன், காண்ட்வா (ஓம்காரேஷ்வர்) மற்றும் கார்கோன் (மகேஷ்வர்) மாவட்டங்களில் திட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். மின்-ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், சாலையோர உணவு விற்பனையாளர்கள், மெஹந்தி கலைஞர்கள், நினைவு பரிசு தயாரிப்பாளர்கள், சுற்றுலா விற்பனை நிலையங்களில் விற்பனை உதவியாளர்கள், கதைசொல்லிகள், படகு ஓட்டும் பெண்கள், பராமரிப்பாளர்கள் உட்பட சுற்றுலா தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் பயனாளிகளுடன் அவர் நேரடியாக உரையாடினார்.

நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு உள்கட்டமைப்பு, சமூக பங்கேற்பு மற்றும் பிற அரசுத் துறைகளுடன் ஒன்றிணைக்கும் முயற்சிகளின் நிலையும் இந்தப் பயணத்தின்போது  மதிப்பீடு செய்யப்பட்டது. மகேஷ்வரில், திறன் பயிற்சி பெற்ற பிறகு, சுற்றுலா வசதி மையத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுடன் அவர் உரையாடினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.