Friday, September 18 2026 | 07:27:57 PM
Breaking News

அஸ்மிதா பளுதூக்குதல் லீக்கை துவக்கி வைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Connect us on:

உத்தரப்பிரதேச மாநிலம் மோடிநகரில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா லீக் சீசனை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா சீசன், எட்டு வெவ்வேறு எடைப் பிரிவுகளில் 42 பெண்கள் பங்கேற்ற பளுதூக்குதல் லீக்குடன் தொடங்கியது.

நடப்பு நிதியாண்டான 2025-26-இல், 15 விளையாட்டுப் பிரிவுகளில் 852 லீக்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள லீக்குகளில் 70,000க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். கடந்த சீசனில், 27 விளையாட்டுப் பிரிவுகளில் 550 லீக்குகள் நடத்தப்பட்டன, இதில் 53,101 பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

“ஒவ்வொரு மட்டத்திலும் வாய்ப்புகளை உருவாக்கி, பின்னர் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்ப்பது எங்கள் நோக்கம். மோடிநகரில் இங்கு வந்துள்ள இந்த குழந்தைகளின் கண்களில் ஆர்வம் இருப்பதை நான் காண்கிறேன். இன்னொரு மீராபாய் சானுவை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, அஸ்மிதா பளுதூக்குதல் லீக்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, பங்கேற்பாளர்களின் மன உறுதியை உயர்த்தினார்.

“மீராபாய் சானுவை விட சிறந்த முன்மாதிரி இருக்க முடியாது. மணிப்பூரின் தொலைதூர  கிராமத்திலிருந்து வந்து உயர்ந்த மட்டங்களில் சிறந்து விளங்கிய அவர், அனைத்து பெண் பளுதூக்கும் வீரர்களுக்கும் ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளார். அவரது பங்கேற்பு, பளுதூக்குதலில் கலந்துகொள்ளும் இளம் பெண்களுக்கு ஊக்கமளிக்கும்,” என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.

விளையாட்டுக்கான, அரசின் “360 டிகிரி” உறுதிப்பாட்டை டாக்டர் மாண்டவியா மீண்டும் வலியுறுத்தினார், மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ள விளையாட்டு பட்ஜெட்டில் இது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

“இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் அடைந்து, ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களிடம் நீங்கள் உயர்ந்து பிரகாசிக்க ஒரு பாதை உள்ளது என்று சொல்ல விரும்புகிறோம். கேலோ பாரத் நிதி (விளையாட்டுக் கொள்கை), இந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து, பள்ளி விளையாட்டுகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறோம்”, என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.

2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அஸ்மிதா லீக்குகள், விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்ததாக ஒலிம்பியன் மீராபாய் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …