Monday, December 15 2025 | 11:39:07 AM
Breaking News

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது

Connect us on:

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.  இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். வேளாண் உற்பத்தி அமைப்புகள், மண்வள நிர்வாகம், பருவநிலை ஏற்பு மற்றும் தணிப்பு, வாழ்வாதார திட்டங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சிக்கான முன் முயற்சிகளில் நபார்டு மேற்கொண்டு வரும் சேவைகளையும் அமைச்சர் பாராட்டினார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், மத்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பவளப்பாறை, மாங்ரோவ் சூழலை மீட்டெடுத்தல், மண்வளம், பழங்குடியினர் மேம்பாடு போன்றவற்றில் எம். எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை உடனான நபார்டு வங்கியின் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார்.

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு ஆர் ஆனந்த் தமது உரையில், உள்கட்டமைப்பு உருவாக்கம், வேளாண்மைக்கு மறு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்காக தமிழ்நாட்டிற்கு 2024-25 நிதியாண்டில் ரூ. 50,000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் இது, மற்ற எந்த மாநிலத்தைவிடவும் கூடுதலாகும் என்றும் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் திரு வி. சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விருதுநகரில் உள்ள சீட்ஸ் அமைப்பு, பச்சைமலையைச் சேர்ந்த ஷாலோம், தர்மபுரியில் உள்ள டீப்ஸ் உள்ளிட்ட சிறந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள், ஊரக நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர  சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.