Sunday, December 07 2025 | 10:20:55 PM
Breaking News

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

Connect us on:

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

 தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 5.08 லட்சம் 5ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை துல்லியமான விவசாயம், தொலைதூரக் கல்வி மற்றும் தொலை மருத்துவசேவை போன்ற பயன்பாடுகளுக்கு வேகமான இணைய சேவைகளை வழங்குகின்றன.

5ஜி சேவைகளைப் பரப்புவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் 5ஜி அலைக்கற்றை ஏலம், வங்கி உத்தரவாதம் மற்றும் வட்டி விகிதங்களைச் சீரமைத்தல் போன்ற நிதி சீர்திருத்தங்கள் அடங்கும். மேலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவலை எளிதாக்க, விரைவு சக்தி சஞ்சார் போர்ட்டல் மற்றும் புதிய வழித்தட அனுமதி விதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு சமூகப் பொருளாதார 5ஜி பயன்பாடுகளை உருவாக்கவும், நாட்டிற்குத் தேவையான 6ஜி தயாரான கல்வி மற்றும் ஸ்டார்ட்-அப் சூழலை உருவாக்கவும், இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் 100 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதனை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …